Categories: Ongoing Novel

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2-5

5

சமர்த்திக்கு எப்படி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் என்று கேட்டால் அவளுக்குப் பதில் கிடையாது. அந்த நேரம், அவனிடமிருந்து தப்பி வந்துவிட வேண்டும் என்பது மட்டும்தான் தோன்றியதே அன்றி, வைத்தியர் சொன்னது எதுவும் அவள் புத்திக்குள் ஏறவில்லை.

மீண்டும் அவனோடு வாழத் தயாரில்லை. அதுவும் அவனைப் போன்ற வறண்ட நிலம் கொண்ட தந்தை அவள் குழந்தைக்கு வேண்டாம். தந்தையென்றால் முன் உதாரணமாக இருக்கவேண்டுமே தவிர, இப்படி வீட்டில் ஒருத்தி வெளியே ஒருத்தி என்று வாழும் தந்தை வேண்டவே வேண்டாம். பெற்ற தந்தையையே தூக்கி எறிந்தவள் அவள். கட்டிய கணவனை எறிவது அத்தனை சிரமமா என்ன?

தயாளனும், புஷ்பாவும் என்னை எப்படி வளர்த்தார்களோ அப்படிக் குழந்தையை வளர்ப்பேன். எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை.

என்ன இப்போது சற்று வேலைப் பழு, அதனால் கொஞ்சமே கொஞ்சமாய் என்னைக் கவனிக்க முடியவில்லை. அதற்காக முற்று முழுதாகக் கவனிக்காது விட்டுவிடுவேனா என்ன?’ என்று ஏதேதோ எண்ணியவாறு பெட்டியை எடுத்துத் துணிகளை அடுக்கிய போது உத்தியுக்தன் நினைவுக்கு வந்தான்.

இவனிடமிருந்து எப்படித் தப்பிப்பது…? இவள் எங்கே சென்றாலும் சுலபத்தில் கண்டுபிடித்து விடுவானே. அவன் கரங்கள் நீளாத இடங்கள் எது? நினைக்கும் போதே பயம் வந்தது. கூடவே அண்ணன் அண்ணிக்கு என்ன பதிலைச் சொல்வது என்கிற குழப்பமும் வந்தது. அவர்கள் இல்லாமல் ஏழு மாதங்களைக் கடந்துவிட்டாள்தான். ஆனால் இப்படியே காலம் பூராகவும் இருந்துவிடுவாளா என்ன? இருந்துவிட முடியுமா? தெரியவில்லையே… நினைக்கும் போதே அழுகை வந்தது.

ஆனால் இதற்காகப் பயந்தால், உத்தியுக்தனோடு அவன் வீட்டிற்குச் செல்ல வேண்டியதுதான். ம்கூம்… முடியாது… முடியவே முடியாது. அவன் வர முதல் இங்கிருந்து போய்விட வேண்டும்… ஆனால் எங்கே போவது. குழப்பம் வர, தொப்பென்று படுக்கையில் அமர்ந்தாள் சமர்த்தி. திடீர் என்று குழந்தை அசையத் தொடங்க, பசி என்று புரிந்தது.

அப்படியே தன்னைப் போலவே பசியென்றதும் துடிக்கும் குழந்தையை எண்ணி ஒரு பக்கம் கோபமும் வந்தது, அதே வேளை நகைப்பும் வந்தது. எல்லாவற்றையும் மீறி உத்தியுக்தன் வந்து விடுவானே என்கிற அச்சமும் வந்தது.

இப்போது சாப்பிட நேரமில்லை. முதலில் வீட்டை விட்டுக் கிளம்பலாம். அதன் பிறகு எங்காவது சாப்பாட்டுக் கடையில் நின்று நிதானமாக உணவை வாங்கி உண்டுவிட்டுச் செல்லலாம், முடிவெடுத்தவளாக, பெட்டியை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள். மேசையில் கிடந்த கைப்பையையும், வாகனத்தின் திறப்பையும் எடுத்துக்கொண்டு, வெளியே வந்தவள் உறைந்துபோய் நின்றாள்.

அங்கே உத்தியுக்தன் அவளுடைய வீட்டிற்கு முன்பாகக் காலுக்குக் குறுக்காக மறு காலைப் போட்டவாறு பான்ட் பாக்கட்டிற்குள் கரங்களைச் செருகிக் கிண்டல் புன்னகையுடன் முன்பக்க சுவரில் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.

இத்தனை விரைவாக எப்படி வந்தான்? திகைக்கும்போதே,

“ம்… எவ்வளவு தூரம் ஓடுவதாக உத்தேசம்?” என்றவன், காலை விடுவித்து உள்ளே வர முயல, இவளோ அதிர்ச்சியில் வாய் திறக்க மறந்தவளாக அவனையே வெறித்தாள். நிதானமாக அவளை வாசலிலிருந்து விலக்கியவன், உள்ளே செல்ல, சுயம் பெற்றவளாய், பற்களைக் கடித்து, “ஷிட்…” என்றவாறு கதவை மூடிவிட்டு இவனை நோக்கித் திரும்பி,

“இங்கே என்ன செய்கிறீர்கள்… எதற்காக வந்தீர்கள்…” என்றாள் கடும் எரிச்சலுடன், அவனோ நின்ற வாக்கில் தலையைச் சற்றுக் குனிந்து இவள் பக்கமாகப் பார்த்துப் புன்னகைத்து,

“ம்… சடுகுடு ஆட இடம் தேடி வந்தேன் சதி…” என்றான். அதைக் கேட்டதும், நெற்றிக்கண் திறந்து பார்த்தாள் சமர்த்தி. அவள் சொன்னதை அவளுக்கே திருப்பிப் படிக்கிறானா? பற்களைக் கடித்தவள்,

“அதற்கு நீங்கள் அந்த ஜூலியட்டிடம்தான் போகவேண்டும்” என்றாள் சுள்ளென்று. அதைக் கேட்க இவனுடைய முகம் இறுகிப் போக, இவள் பக்கமாகத் திரும்பி,

“இப்போது நமக்கிடையில் எதற்கு மூன்றாம் நபரை இழுக்கிறாய்?” என்றான் உத்தியுக்தன் அடக்கிய ஆத்திரத்துடன்.

“மூன்றாம் நபரா? யார் அந்த ஜூலியட்டா… அடேங்கப்பா…” என்று வியந்தவள் போலப் புருவங்களைத் தூக்க இவனோ,

“ஆமாம் மூன்றாம் நபர்தான் சமர்த்தி. நான் நீ நம் குழந்தை இதைத்தவிர இடையில் யார் வந்தாலும் அது மூன்றாம் நபர்தான்…” என்றவனை ஆத்திரத்துடன் பார்த்தவள்,

“என்ன சொன்னீர்கள் என்ன சொன்னீர்கள் நம் குழந்தையா… இல்லை இல்லை இல்லை… இது என் குழந்தை… இந்தக் குழந்தையை உங்கள் குழந்தை என்று உரிமை கொண்டாட யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது.” என்றவளை ஏறிட்டவன்,

“என் குழந்தையை நான் உரிமை கொண்டாடாமல் வேறு யார் உரிமை கொண்டாடுவார்கள்… அப்படி உரிமை கொண்டாடத்தான் முடியுமா?” என்று இவன் கேட்க, இவளோ ஏளனத்துடன் சிரித்தாள்.

“ஏன் உரிமை கொண்டாட முடியாது? கனடாவில் ஆண்களே அழிந்து போனார்களா என்ன?” என்று வியப்புடன் கேட்டவளை எரிப்பதுபோலப் பார்த்தான் உத்தியுக்தன்.

பின் அவளை நெருங்கியவன் அவள் கரத்தைப் பற்றித் தன்னை நோக்கி இழுக்க, அவன் இழுப்பான் என்று எதிர்பாராதவள், அவன் மார்பில் வந்து விழ, முட்டிய வயிற்றோடு அவள் இடை நோக்கிக் கரத்தைக்கொண்டு சென்றவன், அவளைக் குனிந்து பார்த்து,

“என்னை விட வேறு ஒரு ஆணுடைய கரம் உன் மீது பட முடியாது சதி…” என்றவனின் கரத்தின் சூடு பின் முதுகில் ஊடுருவி இதயத்தை வந்தடையத் தட்டுத் தடுமாறியவளாக, அவனிடமிருந்து விடுபட முயன்று தோற்று,

“ஏ… ஏன் முடியாது? உங்களுக்கு ஒரு ஜூலியட் இருப்பது போல எனக்கு ஒரு இடியட் கூடவா கிடைக்க மாட்டான்? இங்கே வந்த ஏழு மாதங்களில் ஒருவனைத் தேர்ந்தெடுத்து அவன் கூட வாழும் தகுதி கூடவா எனக்கில்லை” என்று அவள் வியந்தது போலக் கேட்க, இவனோ மென்மையாகச் சிரித்தான்.

அவளுடைய விழிகளுக்குள் தன் விழிகளைக் கலந்து, வலது புறங்கையைத் தூக்கி அவள் கன்னத்தில் பதித்து மெதுவாக வருட, இவளுடைய இதயம் தன் துடிப்பை அதிகரித்தது. அவன் கரம் பட்டதும் கால்கள் துவண்டன. மயிர்க்கால்கள் அனைத்தும் எம்பி நின்றன. உடல் கிறங்கியது. விளைவு உதடுகள் செழித்து ஈரப்பற்றானது.

அதை உணர்ந்தவன் போல, மேலும் புன்னகைத்தவன், கரத்தை அப்படியே கீழே இறக்கிக் கழுத்தில் பதிக்க, சட்டென்று தன் விழிகளை மூடினாள் சமர்த்தி. தேகம் அவளையும் மீறி நடுங்கியது. அவசரமாகப் பூலோகத்திற்கு விடுப்புக் கொடுத்துவிட்டுச் சொர்க்கத்திற்குச் சென்றாள்.

அதை அதைப் புரிந்துகொண்டவனின் மேல் பற்கள் கீழ் உதட்டை அழுந்தப்பற்றிக் கொண்டன.

அவளைத் தொட்டாலே இவன் தேகம் வேறு நிலைக்கு மாறி விடுகிறது. தாபத்துடன் அவன் தொடுகையில் நடுங்கிய செவ்விய இதழ்களைத் தன் பெருவிரலால் பட்டும் படாமலும் வருடிக் கொடுத்து,

“இதோ நான் தொடும்போதே இப்படிக் குழைந்துபோகிறாயே… இதே குழைவை உன்னால் எந்த ஆணின் அருகாமையிலும் பெற முடியாது சதி…” என்றவன் அவளை நோக்கி மேலும் குனிந்து,

“இந்தத் தேகம் என்னிடம் மட்டுமே குழைந்து போகும்…” என்றவாறு தன் கரத்தை அவளுடைய மார்பில் வைத்து,

“இந்த இதயம் என் தொடுகையில் மட்டும்தான் குழைந்து துடிக்கும்… உருகும்…! வேண்டுமானால் சோதித்துப் பார்க்கலாமா?” என்றவாறு குனிந்தவன், சட்டென்று அவளுடைய உதடுகளை மிக அழுத்தமாகப் பற்றிக்கொண்டான்.

அதற்குப் பிறகு சமர்த்திக்கு அனைத்தும் மறந்து போனது. அந்த உதட்டு முத்தத்தில் உலகத்தைத் தொலைத்தவளாக அவனுடன் ஒன்றிப்போக முயன்றாள். அவளுடைய கரங்கள் தாமாக எழுந்து அவனுடைய கழுத்தை வளைத்துப் பிடித்துக்கொள்ள, இப்போத அவன் மேலும் அழுத்தமாக அவள் உதட்டுக்குள் தன்னை புதைக்க முயன்றான்.

எத்தனை நாட்களுக்குப் பிறகான முத்தம். அதன் சுவையின் தித்திப்பில் இருவருமே கிறங்கித் தான் போனார்கள்.

ஆனால் அந்த நாசமாய்ப் போன புத்தி இருக்கிறதே. தேவையில்லாத நேரத்தில் தேவை அற்றதை எண்ணிக் குழம்பிக் கொள்ளும். அது தன் சார்ந்ததையும் நிம்மதியாக இருக்க விடாது. சுத்தவர இருப்பவர்களையும் நிம்மதியாக இருக்கவிடாது.

சமர்த்தியும் அந்த நிலையித்தான் இருந்தாள்.

அந்த நாசமாய்ப் போன மனதில் தேவையின்றி ஜூலியட் வந்து சிரித்தாள்.

அப்போதுதான் அவன் முத்தத்தில் தான் மயங்கிக் கிடந்தது உறுத்தப், பதறி அடித்து விலகியவள், அவன் தொடுகையில் சிலிர்த்த உடலைச் சபித்தவாறே, “எத்தனை தைரியமிருந்தால் என்னை முத்தமிடுவீர்கள்…” சீறினாலும் மனது மீண்டும் அந்த உதடுகளின் தீண்டலுக்காக ஏங்கவே செய்தது.

“ம்… உன்னையே உனக்கு தெரியப்படுத்த வேண்டும் இல்லையா… அதற்குத்தான்…” என்றான் உத்தியுக்தன் இளம் புன்னகையுடன்.

எரிச்சலுடன் அவனை முறைத்தவள், “நீங்கள் எதற்குப் உணர்த்தவேண்டும்…? நானாக ஒருவனைத் தேடிப் பரிசோதிக்கிறேன்…” என்று சிரமப்பட்டுத் தன் கொந்தளித்த உணர்ச்சிகளை அடக்கியவாறு கூற, அவளை மெல்லிய கிண்டல் புன்னகையுடன் பார்த்தான் உத்தியுக்தன்.

“ரியலி..” என்றான். பின் முகம் இறுகிக் கறுக்க,

“முடிந்தால் போய்ப் பார்…” என்றான்.

“என்ன முடியாது என்று நினைத்தீர்களா…” சீறி வந்தது குரல்.

மறுப்பாகத் தலை அசைத்தவன்,

“நோப்… நீ நெருங்கிப் போ… ஆனால், எவனாவது உன்னை நெருங்கினால்… ஐ வில் கில் ஹிம்…” என்று கூற அவனுடைய அந்த அமைதியான அழுத்தமான நிதானமான குரலில் ஒரு கணம் ஆடித்தான் போனாள் சமர்த்தி.

அந்தக் குரல் சொன்னதைச் செய்துவிடும் குரல். உள்ளம் அவளையும் மீறி நடுங்கியது. ஆனாலும் ஆத்திரமும் வந்தது. இவனோ,

“இந்த உலகத்தில், நீ மரணத்தைத் தழுவும் வரையில் உனக்கு நான் மட்டும்தான் சதி… பேச்சுக்காக சொன்னாலும், உன்னால் என்னைத் தவிர வேறு ஒருத்தனை சிந்தையில் கூடத் தீண்ட முடியாது” என்றான் உறுதி போல.

அதைக் கேட்டதும் நெஞ்சம் ஆத்திரத்தில் துடித்தது. எத்தனை தைரியம் இவனுக்கு. இவன் மட்டும் இவளை மணந்த பின், அங்கே ஒருத்தியோடு கூத்தடிப்பான், இவள் மட்டும் ஏகபத்தினி விரதம் காக்கவேண்டுமோ? எரிச்சலுடன்

“ரியலி… அந்தளவு உறுதியோ?”

“ஆமாம்… உறுதிதான் சதி… ஏன் என்றால்…” என்றவன் அவளுடைய கரத்தைப் பற்றித் தன் உதடுகளில் பொருத்தி விடுவித்து,

“ஏன் என்றால்… நீ என்னை மட்டும்தான் காதலிக்கிறாய்…” என்றான் மென்மையாய். அதைக் கேட்டதும், ஆவேசத்துடன் அவனுடைய கரத்தை உதறி,

“என்னது… காதலா… அதுவும் உங்கள் மீதா… ஹா ஹா ஹா இதுதான் பெரிய பகிடியே… (பகிடி என்றால் நகைச்சுவை நையாண்டி என்று பொருள்)” என்றவள் அவனை எரிப்பது போலப் பார்த்து,

“ஒருத்தியைக் காதலித்து, அவள் உருவத்தையே பச்சையாக மார்பில் குத்தி, ஊருக்குக் காட்டுவதற்காக என்னை மணந்து, படுக்கை சுகத்திற்காக என்னைப் பகிர்ந்து, என்னை ஒரு மனுஷியாகக் கூட மதிக்காது, வெறும் உயிரற்ற ஜடப்பொருளோடு ஒப்பிட்ட உங்கள் மீது எனக்குக் காதலா? அடேங்கப்பா… கற்பனைவளம் மிகச் சிறப்பாகத்தான் இருக்கிறது மிஸ்டர் உத்தியுக்தன்…” என்று எகிற, இவனோ ஒரு கணம் அமைதியாக இருந்தான்.

“இதற்கெல்லாம் ஆரம்பச் சுழி போட்டது யார் சமர்த்தி…? தெரியாமல்தான் கேட்கிறேன் முன்னம் எனக்கும் உனக்கும் ஏதாவது பழக்கம் இருந்ததா? உன் குடியை நான் கெடுத்தேனா? ஏதோ ஒரு வேலையாக இங்கிலாந்து சென்றவனின் வாழ்க்கையில் கபடி ஆடுகிறோம் என்கிற அறிவே இல்லாமல் என் வாழ்க்கையில் உள்ளே நுழைந்தது யார்? உன்னோட சுயநலத்துக்காக, நீ பெயர் வாங்க வேண்டும் என்பதற்காக, நீ பணம் சம்பாதிக்க என்னுடைய தனி அறைக்குள் நுழைந்தது மட்டும் இல்லாமல், என்னையே காயப்படுத்தி விட்டு ஓடினாயே… இது எதுவும் உனக்கு உறுத்த வில்லையே. செய்யக் கூடாத தப்பையும் செய்து விட்டுக் கொஞ்சம் கூடக் குற்ற உணர்ச்சியில்லாமல் உன் அண்ணன் அண்ணியின் மகிழ்ச்சிக்காக பணத்தை வாங்கி என் வாழ்க்கையை நாசம் ஆக்கினாயே… இதில் என்ன நேர்மையை நீ கண்டு விட்டாய்? சரி அதை விடு, உண்மை தெரிந்த பின்பும் உன்னோட மானம் மரியாதையை காப்பாற்ற இன்னொருத்தனின் வாழ்க்கையை புதைகுழிக்குள் தள்ளி விட்டு நீ குளிர் காய்ந்தாயே… இதெல்லாம் எந்த நியாயத்தின் சேர்த்தி. இதையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் செய்தது நீ. பிறகு என்னையே தப்புச் சொல்கிறாயே…? உன்னால் நான் இழந்தது ஏராளம் சதி… என்னுடைய பெயர், புகழ், செல்வாக்கு, தொழில் எல்லாவற்றையும் உன்னுடைய முட்டாள் தனத்தால், சுயநலத்தால் தொலைத்தேன். ஆனால் என்னாலி நீ என்னத்தை தொலைத்தாய்? எதை இழந்தாய்? சொல் சமர்த்தி… என்னால் நீ எதைத்தான் இழந்தாய்?” என்றான் கடும் ஆத்திரத்தில்.

சமர்த்தியோ பேச முடியாது வாயடைத்து நிற்க, அவளை வெறுப்போடு பார்த்தான் உத்தியுக்தன்.

“என் உள்ளே கணன்று விட்டெரியும் ஆத்திரத்திற்கு முழுக்க முழுக்கக் காரணம் நீ… ஆனால் நெஞ்சு நிறைய அத்தனை கோபத்தையும் வைத்துக்கொண்டு உன்னிடம் ஒரு துளி கூடக் காட்டமுடியாமல் உன்னைக் காக்க முயல்கிறேன் பார்… ஐ ஆம் த வேர்ல்ட் ஸ்டுபிட் மான் இன் த வேர்ள்ட் சமர்த்தி…” என்றான் பொறுமையதை தொலைத்த குரலில்.

“இதோ இப்போது இந்தக் கணம் கூட நீ வேண்டும் என்று உள்ளே தவிக்கிற என்னுடைய முட்டாள் தனத்தை என்னவென்று சொல்ல?” என்றவன், அவன் சொன்னதைக் கேட்டு வெளிறிய அவள் முகத்தைக் கண்டதும் சற்று நிதானித்தான். தன் தலையைக் குலுக்கியவன்,

“இட்ஸ் இனஃப் சதி.. தேவையற்ற பேச்சுக்களில் நேரத்தைச் செலவிடுவதில் பயனில்லை… நடந்து முடிந்ததைப் பற்றிக் கவலைப்பட்டும் பயனில்லை… அதனால், அடுத்து நம் வாழ்க்கையைப் பற்றி முடிவு செய்யலாமா?” என்றதும் இவளோ, சடார் என்று தலையை நிமிர்த்தி அவனை வெறுப்போடு பார்த்தாள்.

எதை மறந்தாலும் மன்னித்தாலும், அந்த ஜூலியட்டுக்கும் இவனுக்குமான தொடர்பை இணைப்பை மறக்க முடியாதே. வெறுப்போடு தலையை ஆட்டியவள்,

“ஓ… முடிவு செய்யலாமே. முதல் கட்டமாக எனக்கு உங்களிடமிருந்து விவாகரத்து வேண்டும்…” என்றாள். அதைக் கேட்டதும், ஒரு கணம், ஒரே கணம் இவனுடைய முகம் செந்தணலைக் கடன் வாங்கிப் பின் அடங்கியது. உடல் இறுக அவளைக் கொல்லும் வெறியுடன் பார்த்தவன்,

“விவாகரத்தா.. ஓவர் மை டெட் பாடி..” என்றான் சீறலாய். இவளோ நக்கலாய் இவனைப் பார்த்து

“வை நாட்… உங்களுடனான வாழ்க்கைக்குச் சாத்தியமே இல்லை என்கிற போது, இந்தத் திருமணப் பந்தம்தான் எதற்கு? ஆண்கள் நீங்கள் எல்லோரும் திருமணம் முடிக்க முன்னும் ஒருத்தியை வைத்திருப்பீர்கள். திருமணம் முடித்த பின்னும் இன்னொருத்தியை வைத்திருப்பீர்கள். நாங்கள் மட்டும் கணவனே கண்கண்ட தெய்வம் என்பது போல நீங்கள் செய்யும் அநியாயங்களைக் கண்டும் காணாததும் போல ஒரு மூலையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? நான் என் வாழ்க்கையையும் இளமையையும் தொலைத்துவிட்டு நிற்கவேண்டுமா என்ன? இது என்ன பதினெட்டாம் நூற்றாண்டு என்று நினைத்தீர்களா…?” என்றவளைக் கீழ்க்கண்ணால் பார்த்தான்.

என்ன நினைத்தானோ அவனையும் மீறி அவனுடைய உதடுகளில் மெல்லிய புன்னகை அரும்ப முயன்று தோற்றுப் போனது.

“நம்முடைய வாழ்க்கை சாத்தியமில்லை என்று உனக்கு யார் சொன்னார்கள் சதி…”

“யார் சொல்லவேண்டும் நான்தான் சொல்கிறேன்… சத்தியமாக இனி உங்களோடு என்னால் வாழ முடியாது… எனக்குச் சுதந்திரம் தேவை… இப்படி நீங்கள் சொல்வதற்கு ஆமா சாமி போட்டு வாழ என்னால் முடியாது. என்னால் மட்டுமல்ல, என் குழந்தைக்கும் அழகான சூழல் வேண்டும்… நிச்சயமாக உங்கள் நிழலின் கீழ் கிடைக்க வாய்ப்பேயில்லை…” என்று மறுப்பாகக் கூற,

“என் குழந்தைக்கு என் நிழலில் இவை கிடைக்காதென்று உனக்கெப்படித் தெரியும்?” என்று அடக்கிய ஆத்திரத்துடன் கேட்டவனைத் தலை முதல் கால் வரை பார்த்தவள்,

“அதற்கு அன்பான சூழ்நிலையில் வாழ்ந்திருக்க வேண்டும்… நீங்கள்தான்…” என்றவள் ஏளனத்துடன் சிரித்து,

“இத்தகைய சூழ்நிலை எனக்கு வேண்டாம்…” என்றதும், இவனோ மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் கட்டி அவளை வெறித்தான்.

“என் பருவகால வாழ்க்கையை நான் தீர்மானிக்கவில்லை சதி… அதைத் தீர்மானித்தது என் பெற்றோர்…” என்றான் அடக்கிய ஆத்திரத்தோடு.

“யார் தீர்மானித்தாலும், உங்கள் வறண்ட குணம் என் குழந்தைக்கு வேண்டாம்… அவனை நான் நன்றாகப் பார்த்துக் கொள்வேன்… தயவு செய்து எங்களை நிம்மதியாக விட்டுவிட்டுப் போகிறீர்களா? நீங்கள் என்னதான் கெஞ்சினாலும், மிஞ்சினாலும் உங்களோடு வர நான் தயாராக இல்லை…” என்றதும்,

“சதி நம் குழந்தைக்குத் தந்தை வேண்டும் சதி… தவிரத் தனியாளாக உன்னால் குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியாது. உனக்கு ஒரு வேளை சமையல் கூடத் தெரியாது… எப்படிக் குழந்தையின் பசியைப் போக்குவாய்?” என்று அழுத்தமாகக் கேட்க, இவளோ,

“அதற்கு நீங்கள் ஏன் வருத்தப் படுகிறீர்கள்… நிச்சயமாக நான் தனியாளாக இருக்கப் போவதில்லை… என் குழந்தைக்கு நல்ல ஒரு தந்தையை முக்கியமாக நன்றாகச் சமைக்கத் தெரிந்த ஒருவனைத் தேடிக் கொடுக்க என்னால் முடியும்… அது என் பிரச்சனை” என்று திடமாகக் கூற, ஒரு கணம் விழிகளை அழுந்த மூடி உடல் இறுக நின்றான் உத்தியுக்தன். பின் தலையை மறுப்பாக ஆட்டி,

“இல்லை சதி… இதற்கு நான் சம்மதிக்க மாட்டேன். பெற்றவளே இன்னொருத்தனை அழைத்து வந்து இதுதான் என் கணவர் என்று அறிமுகப்படுத்தும்போது ஏற்படும் அவமானமும் வலியும் எப்படி இருக்கும் என்று உனக்குத் தெரியாது… அந்த நிலை என் குழந்தைக்கு வர நான் விடவும் மாட்டேன்… வருபவன் எப்படியெல்லாம் குழந்தையைத் துன்புறுத்துவானோ.. எப்படியெல்லாம் மனதால் காயப்படுத்துவானோ… அத்தகைய நிலைக்கு என் குழந்தையைத் தள்ள ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் சதி…” என்று உறுதியாகக் கூற, அதிலிருந்த வலியைக் கவனிக்கத் தவறியவளாய்,

“ரியலி… அதே குழந்தையின் தந்தை இன்னொருத்தியை அழைத்து வந்து இதுதான் உன் புதிய தாய் என்றால் மட்டும் அதன் உள்ளம் குளிர்ந்து துள்ளிக்குதிக்குமோ?” என்றாள் எகத்தாளமாக.

இவனோ சடார் என்று அவளைப் பார்த்து,

“என்ன உளறுகிறாய்? என் உயிர் இருக்கும் வரைக்கும் என் குழந்தையை அத்தகைய ஒரு நிலைக்குத் தள்ளவே மாட்டேன்.” என்றான் சீறலாய்.

“ஆமாம் ஆமாம் நீங்கள் எல்லாம் அந்த ஸ்ரீராம சந்திரப் பிரபோ… ஒருத்தியைத் தவிர வேறு யாரையுமே தொட மாட்டீர்கள்…” என்று கிண்டலும் எரிச்சலும் ஒன்றுசேரக் கூற, இவனோ மெல்லியதாகச் சிரித்து,

“நான் ஸ்ரீராமரும் கிடையாது, இராவணனும் கிடையாது. சாதாரண மனுஷன். நீ சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் ஏகபத்தினி விரதன் தான். எவளோடு வாழ்கிறேனோ அவளுக்கு உண்மையாக இருந்தேன். ஜுலியட்டோடு வாழ்ந்த போதும் அவளுக்கு நான் துரோகம் செய்ததில்லை, உன்னை மணந்த பின் உனக்கும் துரோகம் செய்ததில்லை. இனி வாழ் நாள் முழுவதற்கும் நீதான் எனக்குச் சதி…” என்றான் மென்மையாய். அந்தக் குரலில் உருக முயன்ற இதயத்தைத் தட்டி அடக்கியவாறு,

“அடேங்கப்பா…? புல்லரித்துவிட்டது. ஆனால் பாருங்கள் நம்பும் அளவுக்கு நான் முட்டாளில்லை… அதுவும் ஜூலியட்டைப் பார்த்தபிறகு… அதனால் வீணாக முயற்சி செய்யாதீர்கள்…” என்று கூற இவனோ புரியாமல் இவளை ஏறிட்டு,

“என்ன சொல்கிறாய் சதி… ஜூலியட்டிற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்” என்றான்.

“என்ன சம்பந்தமா?” என்றவள் தன் வயிற்றைத் தொட்டுக் காட்டி, இந்தக் குழந்தை மட்டும்தான் உங்கள் வாரிசு என்று உங்களால் உறுதியாகக் கூற முடியுமா? சொல்லுங்கள்… உங்களால் முடியுமா…?” என்றாள் பெரும் ஆவேசமாய். இவனோ, புருவங்கள் சுருங்க இவளைப் பார்த்துவிட்டு,

“இதில் என்ன சந்தேகம்… ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.. ஜூலியட்டிற்குப் பிறகு நான் தொட்டது உன்னை மட்டும்தான். அதுவும் உன்னை மணப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பே ஜூலியட்டுடனான உறவை நிறுத்திக்கொண்டவன்… அப்படியிருக்கையில் எனக்கு வேறு குழந்தைகள் உருவாக வாய்ப்பில்லை… நான் ஒன்றும் கடவுள் இல்லை பார்வையால் பார்க்கும் பெண்களுக்குக் குழந்தை கொடுக்க..?” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் கூற, இவளுக்குத்தான் நெஞ்சை அடைத்தது. எத்தனை பெரிய பொய்.

“இதை நம்பச் சொல்கிறீர்களா? நேற்று ஜூலியட்டைப் பார்த்த பிறகும் இதை நம்புவேன் என்று நினைத்தீர்களா?” உயிரை எரித்த வேதனையுடன் இவள் கலங்க,

“ஜூலியட்டைப் பார்ப்பதற்கும், நான் சொல்வதை நம்புவதற்கும் என்ன சம்பந்தம்?” என்றான் உண்மையான எரிச்சலுடன்.

“என்ன சம்பந்தமா… ஜூலியட்டும் கற்பமாக இருக்கிறாள்…” என்றாள் சமர்த்திப் பற்களைக் கடித்தவாறு.

“அப்படியா… இருக்கலாம்… அவளைச் சந்தித்து ஐந்து மாதங்களாகின்றன… அதனால் எனக்குத் தெரியவில்லை…” என்றான் அக்கறையற்று.

“அந்தக் குழந்தைக்குத் தந்தை யார்…?” என்றதும், இவனோ எரிச்சலுடன் இவளைப் பார்த்தான்.

“எனக்கெப்படித் தெரியும். இதை அவளிடம் தான் நீ கேட்கவேண்டும்…” என்றவனை நம்ப முடியாதவளாகப் பார்த்தாள் சமர்த்தி. ஆத்திரமும் அழுகையும் ஒன்றாகப் போட்டிப்போட்டுக் கொண்டு வர,

“நீங்கள்தான் அந்தக் குழந்தைக்குத் தந்தை என்கிறேன் நான்…” என்று அவள் முடிக்கவில்லை, சீற்றத்துடன் தன் கரத்தை ஓங்கிவிட்டிருந்தான் உத்தியுக்தன்.

அவனுடைய முகம் ஆத்திரத்தில் நெருப்பாய்ப் பற்றிக்கொள்ள, மூச்சுக்காற்றோ, அந்தச் சூட்டை எடுத்துக்காட்டும் வகையில் மிகப் பயங்கரமாக வெளி வர அதை வெளிப்படுத்தும் வகையில் தன் பலம் பொருந்திய கரத்தை அவள் கன்னத்தை நோக்கி இறக்கத் தொடங்கினான்.

அவன் கரத்தை உயர்த்தியதும், தன்னிச்சையாய் சமர்த்தியின் விழிகள் பயத்தில் மூடி, எங்கே அடி விழுந்துவிடுமோ என்று அஞ்சியவள் போலத் தலையைத் திருப்ப, இவனோ இறக்கிய கரத்தைச் சிரமப்பட்டு இடை நிறுத்தி, விரல்களைச் சுருக்கிக் கீழே இறக்கியவாறு,

“சே…” என்றான். இவனுக்கு ஆத்திரம் கட்டுக் கடங்காமல் வந்தது.

என்ன வார்த்தை சொல்லிவிட்டாள். வார்த்தையா அது… துப்பிய தீயல்லவா… யாருடைய குழந்தைக்கு யார் தந்தை? வெறுப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தவன்,

“என்ன சொன்னாய்… அந்தக் குழந்தைக்கு நானா தந்தை.. இதைச் சொன்னதற்காகவே உன் பற்களைக் தட்டி உன் கரங்களில் கொடுத்திருக்கவேண்டும்… சீ… இத்தனை கேவலமாகவா என்னைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறாய்? எப்போது நீ என் மனைவியானாயோ, அந்தக் கணத்திலிருந்து நீ மட்டும்தான் எனக்கு. அதுவும் என்று உன் விழிகளைக் கண்டேனோ அந்த விநாடியிலிருந்து ஜூலியட்டைக் கூட நெருங்க முடியாமல், அல்லல் பட்டவன் நான். நீ சென்ற பின், இத்தனை நாட்களும், உன் நினைவில் தூங்க முடியாமல் தவித்தவன் நான்… அப்படியிருக்கையில், ஜூலியட்டின் குழந்தைக்கு என்னைத் தந்தையாக்கப் பார்க்கிறாயா? யார் குழந்தைக்கு யார் தந்தை… சிந்தனையே அருவெறுக்கிறதே… பேசும்போது உனக்குக் கொஞ்சம் கூடவா அருவெறுக்கவில்லை…” என்று அவன் எகிற, வேளை கெட்ட வேளையில் அவள் முகம் நோக்கி வந்த ஜூலியட்டின் உருவம்தான் நினைவுக்கு வந்தது. போதாததற்கு அவளை அணைத்து நின்ற உத்தியுக்தன். அவனோடு ஆடிய உத்தியுக்தன், இப்படி மாறி மாறித் தோன்ற, ஆத்திரத்தோடு அவனைப் பார்த்தவள்,

“நீங்கள் எல்லாம் நடிக்கப் போனால் லியோனார்டோ டிகப்ரியோவையே தூக்கிச் சாப்பிட்டு விடுவீர்கள்…” என்றாள்.

இவனோ, தன் சுட்டுவிரலைத் தூக்கி அவள் முன்னால் ஆட்டி,

“நீ முதன் முறையாக என்னைப் பற்றி அறியாமல் ஒரு கட்டுரை எழுதினாய் பார் அது எனக்கு வலிக்கவில்லை, அன்று அத்தனை பேரின் முன்னாலும் என்னை அவமானப்படுத்தினாய் பார், அதுவும் வலிக்கவில்லை… நான் சொல்வதை நம்பாமல் கண்ட கண்ட பத்திரிகை எழுதுவதை நம்பினாய் பார் அது கூட எனக்கு வலிக்கவில்லை… ஆனால் ஜூலியட்டின் குழந்தைக்கு நான் தந்தை என்றாய் பார்… அது… அதுதான் எனக்கு வலிக்கிறது… நீ என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? சீ… ஒவ்வொரு முறையும் உன் செயலாலும் சொல்லாலும் உன் தரத்தையே இழந்துகொண்டிருக்கிறாய் என்று ஏன் உனக்குப் புரியமாட்டேன் என்கிறது?” என்றவன் உதடுகளைக் கடித்து ஒரு கணம் அமைதியாக இருந்தான். பின் தலையைக் குலுக்கி,

“இந்த நிலையில் நான் எதைச் சொன்னாலும் நீ நம்பப் போவதில்லை. என் உணர்வுகளைக் கூறினாலும் நீ புரிந்துகொள்ளப் போவதில்லை… ஆனால் பார்… நம்முடைய சுயநலத்திற்காக, நம்முடைய மகிழ்ச்சிக்காக நம் குழந்தையை அநாதைபோல நடுத்தெருவில் விடுவது சரியா? நான் ஒப்புக் கொள்கிறேன்… நான் வாழ்ந்த சூழல் உன்னதைப் போல இன்ப மயமானது இல்லை. அன்று பட்ட அடிதான், எனக்குக் குழந்தையே வேண்டாம் என்று முடிவுசெய்யக் காரணமாயிற்று. ஆனால் இப்போது…” என்றவன் தவிப்போடு அவள் வயிற்றைப் பார்த்து,

“இது என் குழந்தை சதி… என் இரத்தம்…” என்றவாறு தன் கரங்களை ஏந்தி, இந்தக் கணமே என் கரங்களில் ஏந்தி மார்போடு அனைத்து பாதுகாப்பாய் நான் இருப்பேன் என்று கூறவேண்டும் என்று ஏக்கமே தோன்றுகிறது… சதி… எனக்குக் குழந்தை வரப்போகிறது என்று அறிந்த அந்த நொடி… அந்த விநாடி… ஓ காட்… நான் எப்படி உனக்குப் புரியவைப்பேன்… நான் இழந்தவை அனைத்தையும் அதற்குக் கொடுக்கவேண்டும் என்கிற வெறி, எனக்குக் கிடைக்காத தந்தை பாசம் அதற்குக் கொடுக்கவேண்டும் என்கிற வேகம்,” என்றவன் அவளை நெருங்கி,

“நான் மறந்துவிடுகிறேன்… நீ செய்தவை அனைத்தையும் மறந்து விடுகிறேன்… கம் வித் மி… அன்ட் கிவ் மி எச் சான்ஸ் டு டே கெயர் ஆஃப் யு… சதி… ஜெஸ்ட் எ சான்ஸ்… ஐ வில் டே கெயர் ஆஃப் எவ்ரிதிங்… ஐ ப்ராமிஸ் யு… இதோ பார்… முடிந்த வரை என்னை மாற்ற முயல்கிறேன்… உன் மனம் நோகும்படி நடக்கமாட்டேன்…” என்றவனைத் தன்னிடமிருந்து தள்ளிவிட்டவள்

“என்னது… நான் செய்தவற்றை மறந்துவிடப் போகிறீர்களா? ஆனால் நீங்கள் செய்ததை என்னால் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது. என்னதான் உங்கள் மீது தவறில்லை என்று சொன்னாலும் அதை நான் நம்பவும் போவதில்லை…” என்றவள்,

“அக்கறையாம் அக்கறை… கண்டறியாத அக்கறை… இந்தக் குழந்தை உருவானது தெரியாமல் இருந்திருந்தால், நீங்கள் என்னைத் தேடி வந்திருக்கமாட்டீர்கள்தானே… சே… உங்களோடு வாழப் பிடிக்காமல், உங்கள் நிழல் கூட என் மீது படக்கூடாது என்றுதானே இத்தனை தூரம் ஓடி வந்தேன். இங்கேயும் வந்து தொல்லை செய்தால் நான் எங்கு ஓடட்டும்…” என்று சீறலும் அழுகையுமாகக் கூறியவளைப் பொறுமையற்று பார்த்தான் உத்தியுக்தன்.

“என்னோடு வாழப் பிடிக்காமல் ஓடிவந்தாயா? முட்டாள்… உனக்கு மிக நெருங்கியவர்களைக்கூட விட்டுவிட்டு இங்குவரை ஓடி வந்ததற்குக் காரணம் என் மேலிருந்த கோபமோ ஆத்திரமோ இல்லை… தவறு செய்துவிட்ட குற்ற உணர்ச்சி. என் முகத்தை நேருக்கு நேராகப் பார்க்க முடியாது பார்க்கப் பிடிக்காது இருப்பதற்குக் காரணமும் அதுதான். இப்போது என்னோடு வர மறுப்பதற்குக் காரணமும் அதுதான். உனக்குப் பிடித்தவன் நான். சொல்லப்போனால் என்னை முற்று முழுதாகக் காதலிப்பவள் நீ… உயிருக்கும் மேலானவனை இப்படி அத்தனை பேரின் முன்னாலும் அவமானப் படுத்திவிட்டோமே… எல்லோரும் சேர்ந்து திட்டும் அளவுக்கு நடந்துகொண்டோமே, செருப்படி வாங்க வைத்துவிட்டோமே என்கிற தவிப்பு… குற்றம் செய்த நெஞ்சின் குறுகுறுப்பு இதெல்லாம் சேர்ந்து தான் உன்னை இங்கே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. செய்த தவற்றை எதிர்கொள்ள முடியாத கோழைத் தனம் இது. அதை மறைக்க இத்தனை சப்புக்கட்டுக் கட்டுகிறாய்…” என்றதும் சமர்த்தி ஆத்திரத்துடன் தன் காதுகளைப் பொத்தி,

“இல்லை இல்லை இல்லை…” என்று கத்தினாள். ஆனாலும் அவன் சொன்னதன் நிஜம் பூதாகரமாகத் தாக்க, அதுவரை அவனை வெறுப்பதாக நினைத்தவள், அது வெறுப்பல்ல அவனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்க்கும் தைரியம் இல்லாமை என்பது புரிய அதிர்ந்து போனாள். இதோ இந்தக் கணம் வரை அவனுடைய முகத்தைத் தைரியமாகப் பார்க்க முடியவில்லையே… தவிப்புடன் திணற, இப்போது அவளை நெருங்கியவன்,

“நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும்… நான் மறந்து விடுகிறேன்… நீயும் மறந்துவிடு… நாம் நம் குழந்தைக்காகப் புதிய வாழ்க்கை ஒன்றை அமைத்துக்கொள்ளலாம் சதி” என்றவனை ஏறிட்டாள் சமர்த்தி.

இப்போதும் நெஞ்சில் ஒரு வித வலி. அதுதான் குற்ற உணர்ச்சியா? தெரியவில்லை. ஆனால் அவனோடு சேர்ந்து வாழும் தைரியம் மட்டும் இல்லை என்பது புரிந்து போக,

“நான் எங்கும் வருவதாக இல்லை… தயவு செய்து என்னை விட்டுவிடுங்களேன்… நான் இங்கே சந்தோஷமாக மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறேன். எனக்கு யாருடைய பாதுகாப்பும் தேவையில்லை, யாருடைய கவனிப்பும் தேவையில்லை… நான் எங்கும்… ஏய்… என்ன செய்கிறீர்கள்… விடுங்கள் என்னை… நோ… விடுங்கள் என்னை…” என்று திணறும்போதே சமர்த்தியைத் தன் கரங்களில் ஏந்தியிருந்தான் உத்தியுக்தன்.

இவளோ அவனிடமிருந்து இறங்கும் முயற்சியில் திமிறினாலும் அவனுடைய இறுகிய பிடியிலிருந்து இம்மியும் இவளால் விலக முடியவில்லை.

“உங்களால் என் விருப்பமின்றி எங்கும் அழைத்துச் செல்ல முடியாது… நான் வரமாட்டேன்… காவல்துறைக்குப் போவேன்… மரியாதையாக என்னை இறக்கி விடுங்கள்…” என்று அவள் திமிற, அவனோ மின்தூக்கியில் ஏறித் தன் வாகனத்தை நெருங்கும்வரை அவளைக் கைவிட்டானில்லை.

“ஒருத்தருக்குச் சொல் புத்தி இருக்கவேண்டும். இல்லையா சொந்த புத்தியாவது இருக்கவேண்டும். இரண்டும் இல்லையென்றால் என்ன செய்வது? சொல்லும்வரை சொல்லியாயிற்று. கேட்கமாட்டேன் என்று காதுகளைப் பொத்திக்கொண்டிருந்தால் என்ன செய்வது?” என்றவன் வாகனத்தை நெருங்கி, அலுங்காமல் குலுங்காமல் அவளை இறக்கிய கையோடு ஓட முயன்றவளைத் தன் கைவளைவில் நிறுத்தி, முன்னிருக்கையில் பிடிவாதமாக அமர வைக்க, இவளோ,

“என் உடுப்புப் பை…” என்றவாறு எழ முயன்றாள். அவள் எழுந்த வேகத்தில் வாகனத்தின் டாஷ்போடில் வயிறு பலமாக முட்ட முயல, தன் உள்ளங்கையால் அவள் வயிற்றைப் பற்றித் தள்ளி உட்காரவைத்தவன், அவளுடைய இருக்கை வாரைப் போட்டுவிட்டு,

“அங்கே ஊருக்குப் போனதும் வேறு ஆடைகள் வாங்கிக்கொள்ளலாம்” என்றவாறு கதவை அறைந்து சாற்றிவிட்டு, மறு பக்கமாக வந்து அமர்ந்தவன் வாகனத்தை உசுப்ப, இவளோ ஆத்திரத்துடன் தன்னருகே அமர்ந்திருந்தவனை வெறித்தாள்.

திரும்பிப் பார்த்து, புன்னகைத்து

“வெல் கம் பக்…” என்றவாறு அக்சிலேட்டரை அழுத்த, மறு கணம் வண்டி விமானநிலையம் நோக்கிப் பறக்கத் தொடங்கியது.

What’s your Reaction?
+1
37
+1
8
+1
3
+1
9
+1
0
+1
0
Vijayamalar

View Comments

  • அருமையான பதிவு 😍😍😍😍😍.
    ஏன்டா நீங்களெல்லாம் பொசுக்கு பொசுக்குன்னு தூக்கற அளவுக்கு பாடிபில்டர் ரேஞ்சுக்கு இருந்தா எப்புடி டா?🤔🤔🤔🤭🤭🤭🤭.
    வேண்டாம் ன்னு சொன்னாலும் தூக்கிட்டு போறீங்க. இதையே எங்களால பண்ணமுடியலையே🤧🤧🤧🤧🤧🤧🤧

    • யோவ் நாமதான் சொன்னோம்ல அண்ணாத்த 6'4" உங்க ஆளு வெளும் 5'4" இவள தூக்கிறது கஷ்டமாயா. ஐயோ ஐயோ

Recent Posts

செந்தீ விழுந்த செம்பொற் பாறையில் – 1

(1)     1995 ஆம் ஆண்டு       “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?”   இதைச்…

16 hours ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 16

16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…

2 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 15

15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…

4 days ago

நீ பேசும் மொழி நானாக – இறுதி அதிகாரங்கள்

(38)   மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…

6 days ago

முள்ளில் கசிந்திடும் தேன்துளி – 2- 14

14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…

7 days ago

நீ பேசும் மொழி நானாக – 36/37

  விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…

1 week ago