விழிகளை மூடியவாறு இருந்தவள் அதே கனவு கலையாதவளாகத் தன் விழிகளைத் திறந்து பார்த்தாள். அவன்தான் வந்துகொண்டிருந்தான். அந்த நிலையிலும், அவன் தட்டாது எச்சரிக்கை செய்யாது ‘உள்ளே வரலாமா’ என்கிற வேண்டுதல் இல்லாது உள்ளே வந்தது மெல்லியதாக உறுத்தியது. கூடவே, மனைவியாகக் கொண்ட பின் இந்த நாகரீகம் தேவையா என்ன? என்கிற எண்ணம் தோன்ற, தன்னைச் சமாதானப் படுத்தியவாறு மெல்லிய புன்னகையுடன் நிமிர்ந்தமர்ந்தாள்.
உள்ளே வந்தவன், அங்கே ஒருத்தியிருக்கிறாள் என்கிற என்கிற எண்ணமே இல்லாதவனாக, அவளைப் பற்றி லட்சியம் செய்யாது, தன் கரத்திலிருந்த பையைக் கட்டிலுக்கு முன்பாக இருந்த, மேசையில் வைத்து விட்டு, ஏதோ நிற்பதற்கு சக்தியற்றவன் போலச் சடார் என்று அந்த மேசையிலேயே தன் இரு கரங்களையும் ஊண்டியவாறு குனிந்து நின்றான்.
அவன் தள்ளாடவில்லை, தடுமாறவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு வித ஒவ்வாமையை அவன் நின்ற நிலையில் வைத்து அறிந்துகொண்டார் மிளிர்ம்ருதை. அவனோ, நிமிர்ந்து சற்றுத் தலையைத் திருப்பி அவளைப் பார்த்தான். அந்தப் பார்வையில் அவளையும் மீறிப் படுக்கையிலிருந்து எழுந்தாள் மிளிர்ம்ருதை.
அந்தப் பார்வையில் என்ன இருந்தது. ஏனோ அந்தப் பார்வை, அவளுக்கு ஏற்புடையதாக இல்லை. ஒரு வித சிவப்பு, அல்லது வெறி… தெரியவில்லை… அவளையும் மீறி உள்ளம் படபடக்க, ஒரு வித தவிப்புடன், உடல் விறைக்க, ஏதோ தவறு செய்த உணர்வுடன் நடுங்கிய கரங்களை மறைக்க முயன்றவாறு நிறக,
“வெல்… ஏதாவது குடிக்கப் போகிறாயா?” என்றான்.
அப்பாடா பேசி விட்டான்… ஆனால் அந்தக் குரலில், கடுகளவும் காதலோ கனிவோ இனிமையோ இருக்கவில்லை. மாறாக, ஒரு வித அலட்சியமும் கடுமையுமே அதில் தொக்கி நின்றன.
யோசனையுடன் அவனை ஏறிட்டவளுக்குத் தொண்டை வறண்டுபோயிருந்தாலும், அந்தக் குரலை மதித்து அவளால் கேட்க முடியவில்லை. அதனால்,
“இல்லை” என்று மறுப்பாகத் தலை அசைத்தாள்.
“ஓக்கே…” என்று தன் தோள்களைக் குலுக்கியவன், எழும்போதே அவனிடம் மெல்லிய தடுமாற்றம்.
‘குடித்திருக்கிறானா? ஆனால் வாடை வீசவில்லையே…?’ குழம்பும் போதே எவ்வித அவசரமும் இன்றித் தன் மேல் சட்டையைக் கழற்றி, அங்கிருந்த கதிரையில் போட, இவள் விதிர் விதிர்த்துப் போனாள்.
முதன் முறையாக ஒரு ஆண்மகனை மேலாடையில்லாமல் பார்க்கிறாள். அதுவும் மேலாடையில்லாமல் தெரிந்த அவனுடைய உடலின் வடிவம் ஒரு பக்கம் அவளுக்கு அச்சத்தைக் கொடுத்தாலும், அதையும் மீறி இவன் என்னவன் என்கிற கர்வத்தையும் கொடுக்கவே செய்தது.
உருண்டு திரண்ட அந்தக் கரங்கள் அவளுக்குரியது. அந்தப் பரந்து விரிந்த மார்பு அவள் அடைக்கலமாவதற்காகவே அகன்றிருக்கின்றது. விம்மிப் புடைத்த அந்தத் தோள்கள் அவளைச் சுமப்பதற்காக உருவானவை… சற்றுக் குறுகிய இடையும், அவனுடைய உருவத்திற்கு ஏற்ற சிக்ஸ் பாக் வயிறும்… அவளைக் காப்பதற்காக உருவானவை. இவன் என்னவன்… எனக்கே எனக்கானவன். எனக்கு மட்டும் உரிமையானவன்… இவன் உடலின் ஒவ்வொரு அங்குலமும், என்னுடமை. இப்போதே சென்று தன் மென் கரங்களால், அவன் உடலின் திடத்தை வருடி உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்கிற வேட்கை எழுந்தது. இப்போதே அவனிடம் தன்னை அர்ப்பணித்து விடவேண்டும் என்கின்ற போதை அவளைத் தன்னிலை மறக்கச் செய்ய, தன் வெட்கம் இழந்து, அவனையே இமைக்காது பார்க்க,
அவனோ அவளுடைய குழைந்த நிலையைச் சிறிதும் கருத்தில் கொண்டானில்லை. தன் போக்கிற்குக் குளியலறைக்குச் சென்றவன், சற்று நேரம் கழித்து, வெளியே வந்து, மேசையினருகே சென்றான். அங்கே வைத்திருந்த பையிலிருந்த பொருட்களை வெளியே எடுத்துக் கடைபரப்பத் தொடங்க, அதைக் கண்டவளின் மாய உலகம் சிதைந்து கலைந்து போக, அங்கே ஒரு வித அச்சம் உருப்பெற்றது.
அவள் கனவு காண்கிறாளா என்ன… மீண்டும் உற்றுப் பார்த்தாள். இல்லை… அவள் சரியாகத்தான் பார்த்தாள். அத்தனையும் மதுப் போத்தல்கள். அச்சமும் பதற்றமும் போட்டிப்போட, அவனை ஏறிட்டுப் பார்த்தவளுக்கு அவளையும் அறியாமல் உடல் நடுங்கியது. அதே நேரம் விரைந்து சென்று அவனைத் தடுக்க முடியாது, கால்கள் வேரோடிப்போய் நின்றன.
அவனோ அலட்சியமாக ஒரு கிளாசில் அந்தப் பொன்னிறத் திரவத்தை ஊற்றத்தொடங்கினான். அது நிறைந்ததும், நாவால் தன் உதடுகளை ஈரப்படுத்திப் பற்களால் கீழ் உதட்டைக் கடித்து விடுவித்து, ஆழமாக ஒரு மூச்சை எடுத்து வாயாலேயே அந்த மூச்சை வெளியிட்டவன், நிறைந்திருந்த மதுக் குவளையை வலது கரத்தால் எடுத்தவாறு, மூக்கைப் பலமாக உரிஞ்சி அவளை நோக்கித் திரும்பினான்.
பின், மேசையில் சாய்ந்தாற் போல அமர்ந்து இடது கரத்தை மார்புக்குக் குறுக்காக் கட்டி, மதுக்குவளையை ஏந்தியிருந்த கரத்தை கட்டிய கரத்தின் மீது வைத்தவாறு நிதானமாக அவளைப் பார்க்க, இவளோ அவனைத்தான் விறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
‘இவன் குடிப்பானா? இவளால் நம்பவே முடியவில்லை. சும்மா குடிகாரர்களைக் கண்டாலே காததூரம் சென்று விடுபவளுக்கு, அவளின் மனம் கவர்ந்தவன் குடிப்பான் என்பதை அறிந்ததும் அவளால் தாள முடியவில்லை. ஆனால் தந்தை இதையெல்லாம் விசாரிக்காமலா இருந்திருப்பார்? குழம்பிப் போக, அவனோ, வலக்காலுக்குக் குறுக்காக இடக்காலைப் போட்டு, கரத்தில் வைத்திருந்த மதுக்குவளையை உதட்டிற்கு எடுத்துச் சென்று ஒரு சிப்பை இழுத்து எடுத்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.
அந்தப் பார்வையில் தெரிந்த கடினத்தையும், ஒரு வித வெறியையும் கண்ட மிளிர்ம்ருதைக்குக் குளிர் பரவியது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்ன சொல்ல வேண்டும் என்றும் புரியவில்லை. சொல்லப்போனால், இந்தச் சூழ்நிலைக்கு எப்படி நடந்துகொள்வது என்று கூட அவளுக்குப் புரியவில்லை. மலங்க மலங்க விழிக்க மட்டுமே அவளால் முடிந்தது.
சற்று நேரம், அப்படியே இருந்தவனுடைய தொண்டையில் ஒரு வித அவஸ்தையின் அசைவு. பின் என்ன நினைத்தானோ, தன் தலையைக் குலுக்கி நிமிர இப்போது அவனிடமிருந்த அவஸ்தை மறைந்து அங்கே கடினம் பரவியிருந்தது. முகம் இறுகிப்போனது. உதடுகள் ஒன்றோடு ஒன்று அழுத்திக் கொள்ள, தன் முன்னால் ஒரு வித அச்சத்துடன் நின்றிருந்தவளை ஏறிட்டு,
“வெல்… எத்தனை நேரம் இப்படியே நிற்பதாக எண்ணம்?” என்று கேட்டவன், மதுவை ஏந்தியவாறே, சுட்டுவிரலை நீட்டி அசைத்தவாறு,“நேரம் போகிறது சேலையைக் களைந்துவிட்டுப் படுக்கையில் படு…” என்றான் கடையில் உப்பு வாங்குவது போல.
முதலில் மிளிர்ம்ருதைக்கு அவன் என்ன சொன்னான் என்று புரியவில்லை. அவன் சொன்னது புரிந்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ளத்தான் அவளுடைய மனம் பக்குவப்படவில்லை.
அவனோ, வாயைத் திறந்து”ஷ்….” என்கிற ஓசையை எழுப்பியவன், தன் தலையை அங்கும் இங்கும் மறுப்பாக ஆட்டி, கரத்திலிருந்த குவளையை வாய்க்குள் வைத்துத் தலையைப் பின்னால் சரித்து முழு மதுவையும் வாய்க்குள் கொட்டி, வெற்றுக் குவளையை மேசையில் சத்தம் எழுப்புமாறு வைத்துவிட்டுச் சாய்வாக நின்ற நிலையை மாற்றி நிமிர்ந்து நின்றான்.
தலையைச் சற்றுச் சரித்து அவளைப் பார்த்தவன்,
“சொன்னது புரியவில்லை…? ரிமூவ் யுவர் ட்ரஸ்… அன்ட் லை டௌன் த பெட்…!” என்றான் சற்றுக் குரலை உயர்த்தி.
அதைக் கேட்டதும், மிளிர்ம்ருதையால் தன் காதுகளையே நம்ப முடியவில்லை. மனைவியே ஆனாலும் கண்ணியம் காப்பான் என்று நினைத்திருந்தாள். ஆனால், அவனோ… சே… முகம் சிவக்க, பெரும் சங்கடமும் அவமானமும், வேதனையும் ஏற்பட, தன்னiயும் மறந்து,
“விதுலா… நீங்கள்…!” என்று எதையோ சொல்ல முயன்றாள்.
உடனே அவள் முன்னால் தன் கரத்தை நீட்டி,
“அபயன்… அபயவிதுலன்…!” என்று சீறிவிட்டு, தன் கால்களைச் சற்று அகட்டி, இடது கரத்தைத் தன் பான்ட் பாக்கட்டிற்குள் செலுத்தி, அவளை அலட்சியமாகப் பார்த்து,
“நேரம் போகிறது… விரைவாக ஆடைகளைக் களைந்து விட்டுப் படுக்கையில் படு…” என்றதும், இவளுக்கு அருவெறுத்துப் போனது.
கனிவாய் கரம் நீட்டுவான், அவள் உணர்வை மதித்து மடி தாங்குவான் சொற்களாலும், மெல்லிய வருடலாலும் பெண்மையை உணரச் செய்வான் என்று எண்ணியிருக்க அவனோ, சே… கேவலம் இவளைப் பரத்தை போல அல்லவா நடத்துகிறான். தாங்க முடியாத அருவெறுப்பும், கோபமும் எழ, அவனை முறைத்துப் பார்த்தாள்.
ஆனால் அவனோ அதைச் சற்றும் கருத்தில் கொள்ளவில்லை. திரும்பி வெறுமையாக இருந்த குவளையில் இன்னும் மதுவை நிரப்பி அதையும் வாயில் கொட்டிவிட்டு, வெற்றுக் கண்ணாடிக் குவளையைச் சுவரை நோக்கி விசிறிய அடிக்க, அது பறந்த வேகத்தில் சிவரில் பட்டுத் தெறித்துத் தரையில் விழுந்தது.
“நான் சொல்வது புரியவில்லை… டூ வட் ஐ செட்…” என்றான் ஆக்ரோஷமாக.
இப்போதும் மிளிர்ம்ருதைக்கு நம்ப முடியவில்லை. தன் உள்ளப்பீடத்தில் வீற்றிருப்பவனா இத்தகைய தகாத செயலை செய்யச் சொல்கிறான். அவன் கணவனேயானாலும், நாகரீகம் என்று ஒன்றிருக்கிறதல்லவா.
கண்களில் குளம் கட்ட, அவள் மறுப்பாகத் தலையை ஆட்ட, பொறுமை இழந்த மூச்சுடன், அவளை நோக்கி நடந்தவாறு,
“சொல்வது புரியவில்லை… ம்… வந்து படு…” என்றான் அதிகாரமாக.
மிளிர்ம்ருதை அதிர்ச்சியுடன் இரண்டடி பின்னோக்கி வைத்தாள். நாக்கு அண்ணாக்குடன் ஒட்டிக்கொள்ள, பேச்சு வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்தது. சிரமப்பட்டுத் தன்னைத் திடப்படுத்தியவள்,
“உ… உங்களுக்கு என்னவாகிவிட்டது… இரண்டு நாட்களுக்கு முன்பு ந… நன்றாகப் பேசினீர்களே…! இப்போது திடீர் என்று ஏதோ அன்னியன் போல, பிடிக்காத ஒன்றைச் செய்ததுபோல நடந்துகொள்கிறீர்களே… ஏன்?” என்று குரல் தந்தியடிக்க, கேட்டவளை எந்த உணர்ச்சியும் இல்லாமல் பார்த்தான் அபயவிதுலன்.
பின் இரண்டெட்டில் அவளை நெருங்கியவன், அவளுடைய இரண்டு தோள்களிலும் தன்னுடைய கரங்களைப் பதித்துத் தன்னை நோக்கிப் பலமாக இழுக்க, அவள் இழுத்த வேகத்தில் அவளுடைய மென்னுடல், அவன் கடிய உடலோடு வந்து மோதிக்கொண்டது.
கூடவே அவன் உள்ளே செலுத்திய மதுவின் வாடை, அவனுடைய இயற்கை மணத்தை அழித்து விட, அங்கே ஒரு வித ஒவ்வாமையுடனான மணம் அவளைச் சூழ்ந்து கொண்டது. குமட்டிவிடும் போல அந்த மணம் பயமுறுத்த அருவெறுத்துப் போனாள். அவசரமாகத் தன் மூக்கைப் பொத்தி அவனை வலியுடன் நிமிர்ந்து பார்த்தவாறு அவனிடமிருந்து விடுபடப் போராட, அந்தோ பரிதாபம்.
அவனுடைய வலிமையான கரத்தின் பிடியிலிருந்து அவளால் இம்மியும் விலக முடியவில்லை. அவளுடைய தோள் பட்டைகள் கழன்றுவிடும் போல வலித்தன.
அவன் செயல் கொடுத்த கலக்கத்தில்,
“ப்ளீஸ்… என்னை விடுங்கள்ஸ” என்று திமிற, அவனோ கடகடவென்று சிரித்தான். பின் அவளை உற்றுப் பார்த்து,
“என்ன…? விடுவதா…? அதற்காகவா உன்னை மணந்தேன்…?” என்று பரிதாபப் படுவது போலக் கேட்டவனின் வலது கரம், தங்கு தடையின்றி அவளுடைய வெற்று இடையில் ஊர்வலம் நடத்திப் பின் முதுகில் பதித்து மேலும் தன்னை நோக்கி இழுக்க, இப்போது அவள் மொத்தமும் அவன் உடலுடன் முட்டி நின்றது.
அவளோ மேலும் அருவெறுத்துப் போக,
“ப்ளீஸ்… லீவ் மீ! நீங்கள்… நீங்கள் குடித்திருக்கிறீர்கள்…!” என்றாள் மூக்கைப் பொத்திய கரத்தை விலக்காமல்.
“யெஸ்… ஏன்… பிடிக்கவில்லையா?” என்றான் அவன் கடினக் குரலில்.
அவன் பிடியிலிருந்து திமிறியவாறே”ஆம்” என்றாள்.
“குட்… வெரி குட்… அதுதான் எனக்குத் தேவை…” என்றவன், மீண்டும் அவளைத் தன்னுடன் நெருக்க, அவனுடைய பலம் பொருந்திய கரங்களுக்குள் கோழிக்குஞ்சு போல அவளால் நசியத்தான் முடிந்ததே தவிர, அவனிடமிருந்து சற்றும் விடுபடமுடியவில்லை.
கூடவே சிவந்து நரம்போடிய அவனுடைய கடுமையான விழிகள், அவளை அழித்து விடுவன போல, சிவந்து கலங்கிய முகத்தைத் துளைத்துக் கொண்டிருந்தன.
மிளிர்ம்ருதைக்கோ, அவனுடைய அந்த அணைப்பைச் சற்றும் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆவலுடன் காத்திருந்த இனிய உணர்வுகள் முற்று முழுதாக அழிபட்டுப் போன நிலையில், அந்த இடத்தில் அச்சமும், தவிப்பும், வலியுமே ஆட்கொண்டன.
ஏதோ நரகத்தில் விழுந்த உணர்வில், அந்த இடத்தை விட்டுக் கண்காணாத இடத்திற்கு ஓட வேண்டும்போல் தோன்றியது. அவன் கரங்கள் ஊர்ந்த விதத்தில் அங்கமெல்லாம் ஏதோ அசிங்கம் பட்டது போலத் தவித்துப்போனாள் அந்தப் பேதை.
ஆனால் அவனோ, அவளுடைய வலியைச் சற்றும் பொருட் படுத்தினானில்லை. அவனுடைய உதடுகளும் பற்களும் அவள் கழுத்தில் ஆழமாகப் பதியத் துடித்துப்போனாள் மிளிர்ம்ருதை. கூடவே எல்லை மீறிய கரங்களைத் தடுக்க முடியாது கூச்சத்தாலும், அவை கொடுத்த வலியினாலும், அவமானத்தாலும் கூனிக் குறுகிப் போனாள்.
அவள் கழுத்திலிருந்த முகத்தை விலக்கியவன் இப்போது, அவள் முகத்திற்கு நேராகக் கொண்டு சென்று மூக்கைப் பொத்திக்கொண்டிருந்த அவளுடைய கரத்தில் தன் உதடுகளை அழுந்த பதித்தான்.
அவளுடைய மென் உதடுகள் கொடுக்கும் இன்பத்தை அத் தளிர் கரங்கள் கொடுத்துவிடுமா என்ன?
சலிப்புற்றவனாக, இடக் கரத்தால் அவளுடைய கரத்தைப் பற்றி விலக்கியவாறு, அவளுடைய உதடுகளை நோக்கிச் சென்றான். செவ்விய செழித்த உதடுகளுடன் முட்டுவதற்கான இடைவெளி, வெறும் நெல்முனையளவே.
ஒரு சோடி உதடுகள் நடுங்கின… மறு சோடி உதடுகள் ஆக்ரோஷத்துடன் நெருங்கத் துடித்தன.
ஆனால் நடுங்கிய உதடுகளுக்கோ, மதுவாடை வீசும் அவ் கசந்த உதடுகளை நெருங்கப் பிடிக்கவில்லை. என்ன நடந்தாலும் அந்த உதடுகளைத் தாங்கப் போவதில்லை என்கிற பிடிவாதத்துடன் தன் உதடுகளை இறுக மூடிக் கொண்டவள், தன் முகம் நோக்கி வந்த அந்தக் கடிய முகத்தைக் காணப் பிடிக்காமல் தலையைத் திருப்ப முயல, அந்த முகத் திருப்பல் அவனுக்குச் சீற்றத்தைக் கொடுத்ததோ? கைக்கெட்டியது வாய்க்கெட்டவில்லையே என்கிற ஆக்ரோஷத்துடன் இடையை அழுந்தப் பற்றியிருந்த வலக்கரத்தைத் தற்காலிகமாக விடுவித்து, அவளுடைய தலைமுடிக் கற்றைகளை அழுந்த இறுக்கிப் பிடித்துத் தன் முகம் நோக்கித் திருப்பி அவளை வெறித்துப் பார்த்தான்.
ஒரு கணம் அவனுடைய விழிகள் மங்கித் தெளிந்தன. மீண்டும் மங்கின. அதன் காரணமாகத் தன் விழிகளை அழுந்த மூடி மூடித் திறந்தவனாகத் தன் முன்னால் வலியில் சுனங்கிய அவள் முகத்தை உற்றுப் பார்த்தான்.
அந்த வலி அவனுக்குப் போதுமானதாக இல்லை. அவனுடைய முகத்தில் மேலும் கடுமை ஏறியது. அதுவரை துடித்துக்கொண்டிருந்த அந்தமென் உதடுகளில், தன் வெறிகொண்ட உதடுகளால் இறுகப் பற்றிக்கொண்டான். கூடவே அவளைத் தன்னுடன் இறுக அணைத்தும் கொண்டான்.
இதை மிளிர்ம்ருதை எதிர்பார்க்கவில்லை.
அவனுடைய திடீர் இதழணைப்பு அவளைக் கதிகலங்கச் செய்தது. அவனுடைய முரட்டு அணைப்பிற்குப் பழக்கமில்லாதவளாக அவனுடைய பிடியிலிருந்து திமிறப் பார்த்தாள். முடியவில்லை. அவனுடைய அணைப்பிலிருந்து ஒரு அங்குலம் தன்னும் அவளால் விலக முடியவில்லை. துடித்துத் தவித்துத் தமிறிப் பார்த்தும் பயனில்லாது போக, அவளுடைய அசைவுக்கு ஏற்ப அவன் பிடித்த விதத்தில், அவளுடைய உடலில் பல இடங்கள் கண்டிப் போயின. உதடுகள் அவன் பல் பட்டு இரத்தத்தைச் சிந்தின. அப்படியிருந்தும் அவன் விட்டானில்லை. அச்ச விழிகளுடன் தன் முகத்தை நெருங்கியிருந்த அவன் விழிகளைப் பார்க்க முயன்றாள். விழிகளாலேயே தன்னை விடுமாறு கெஞ்சினாள்.
ஆனால் அவனுடைய சிவந்த கூரிய விழிகளோ, அந்த நீண்ட பெரிய விழிகளால் செந்தணல் பொழியப் பார்த்தாலும், உதடுகளைச் சற்றும் அவளிடமிருந்து பிரித்தானில்லை. மாறாக அவனுடைய வேகம் மேலும் அதிகரிக்கவே செய்தது.
அவளை விடாது, இறுக அணைத்தவாறே படுக்கை வரை இழுத்துச் சென்றவன், சற்று முன் அவளைச் செய்யச் சொன்ன காரியத்தைத் தானே செய்தான்.
தன்னைக் காத்துக்கொள்ள அவள் அசைய முயன்றும் முடியாத நிலையில், அவளுடைய பெண்மை வெட்ட வெளிச்சமாக்கப்பட்டது. அவளுடைய தவிப்பையோ, பதற்றத்தையோ, உணர்வையோ அவன் சிறிதும் கண்டுகொண்டானில்லை.
அவளை அணைத்தவாறே, படுக்கையில் சரிந்தவன், அடுத்து சுனாமியாகி மென்மையாகக் கையாளப் படவேண்டிய பெண்மையை, அகோரமாக, வலிக்க வலிக்கக் கையாண்டான். அவளுடைய கத்தலையோ, கதறலையோ, கெஞ்சலையோ அவன் சற்றும் உணர்ந்துகொண்டானில்லை. சொல்லப்போனால் அவளுடைய கதறல் அவனுடைய வெறியை மேலும் மேலும் அதிகரிக்கவே செய்தது.
“ப்ளீஸ்… என்னை விடுங்கள்… எனக்கு… எனக்கு இது பிடிக்கவில்லை…” என்று கெஞ்சிப் பார்த்தாள். அவனிடமிருந்து பதில் எதிர்மறையாகத்தான் வந்தது.
அவனுடைய வலிமை கூடக் கூட, இவளுடைய பலமும், திடமும் குறைந்துகொண்டு போனது.
ஆறடி நான்கு அங்குலங்கள் கூடிய உயரத்துடனும், அதற்குரிய பலத்துடனும், இருக்கும் ஒருவனை, மெல்லிய மேனியைக் கொண்ட, ஐந்தடி நான்கு அங்குலமேயான ஒரு பெண்ணால் எப்படி ஜெயிக்க முடியும்?
அவனுடைய ஆவேசம், அவனுடைய கடுமையான போக்கு எல்லாமே மிளிர்ம்ருதையைக் குற்றுயிராக்கியது.
பதமாகப் பறிக்கப்படவேண்டிய மலர் கசக்கி எறியப்பட்டது. வாழ்க்கையென்னும் ஆரம்பப் புள்ளி அந்தக் கணமே அழித்தெறியப்பட்டது. பெண்மை என்பது, அவனுடைய அகோர வேகத்தில் முற்று முழுதாகக் கொலைசெய்யப்பட்டது. ஆம் அவளைக் கொல்லாமல் கொன்றான் அந்த ராட்சசன்.
அவனுடைய இறுக்கமான பிடியிலிருந்து போராட முயன்று பூதாகரமாகத் தோற்றாள் மிளிர்ம்ருதை. அவனுடைய மெல்லிய வருடல் கூட, அவளுக்கு ஊசியால் குத்தியது போன்ற வலியைக் கொடுத்தது. அவளுடைய போராட்டம், கெஞ்சல், வலியின் ஓலம் எதுவும் அவனைச் சற்றும் இளக்கவில்லை.
பெண்மையைப் போற்றிக் கையாளப்படவேண்டிய தாம்பத்தியத்தின் ஆரம்பப் பாடம், வலிக்க வலிக்கக் கத்தியால், கீறிப் பதியப்பட்டது. இரை தின்னும் புலியானான் அவன்… அதன் வாயில் பிடிபட்ட மானானாள் இவள்…
அவனுடைய அசுர வேகத்திற்கும், பலத்திற்கும் முன்னால், மெது மெதுவாகத் தன் உணர்வுகளைத் தொலைக்கத் தொடங்கினாள். முற்று முழுதாகத் தொலைத்தாள்.
எப்போது விழிப்பு வந்தது… அவள் அறியாள். எப்போது அவளை விட்டு விலகினான்? விலகிவிட்டானா என்ன? ஆனால் இப்போதும் அவள் மீது விழுந்துகிடப்பது போன்ற உணர்வில் மூச்சு முட்டினாள் அந்தப் பேதை.
இதுதான் தாம்பத்திய உறவா? இத்தனை கசப்பாகவா இருக்கும். தேகம் எல்லாம் இரும்புக் கம்பி கொண்டு அடித்ததுபோல வலிக்கிறதே. இது இவளுக்கு மட்டும்தானா… எல்லோருக்கும் அப்படிதானா இருக்கும்…? இல்லை எல்லா ஆண்களும் பெண்களுடன் இப்படித்தான் நடப்பார்களா? ஆனால் அவள் அறிந்து கேட்டது எதுவும் இப்படி நரகவேதனையைக் கொடுக்கும் என்று சொல்லவில்லையே…’ தொண்டை வறள மெதுவாக விழிகளைத் திறந்தாள்… இல்லை இல்லை திறக்க முயன்றாள்… எங்கும் இருட்டாக இருந்தது. அவள் விழித்துவிட்டாள் தானே… இன்னும் இருட்டாக இருக்கிறதே… ஒரு வேளை அவள் உலகம் இருண்டு விட்டதோ… சற்று முன் நடந்ததை நினைக்கும் போது அவளால் தாள முடியவில்லை.
இனி ஜென்மத்திற்கும் அவனுடைய அருகாமையை அவளால் ஏற்க முடியாது என்பது புரிந்தது. ஏன் அவன் முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்க முடியும் போலத் தோன்றவில்லை.
இது இது… கூடக் கற்பழிப்புதானே. அவளுடைய உணர்வை, அவளுடைய உடலை, அவளுடைய பெண்மையை அனுமதியின்றிப் படு பயங்கரமாக அழித்துவிட்டானே…
இவள் மறுக்க மறுக்க… கணவனாக இருந்தாலும்… ஏன் இப்படிச் செய்தான். மிளிர்ம்ருதைக்கு உள்ளம் முழுவதும் கசந்து வழிந்தது. அடுத்து என்ன செய்வது என்று புரியாது உடல் முழுவதும் ஏற்பட்ட காயத்தைக் கூட மறைக்கத் தோன்றாது, அப்படியே கிடந்தாள் அவள். அவளால் தன் கைகால்களை ஒரு அங்குலம் தன்னும் அசைக்க முடியும் போலத் தோன்றவில்லை.
மங்கிய புலனுக்குச் சற்றுத் தள்ளி அசைவு கேட்டது. அவளையும் மீறி உதடுகள் நடுங்கின. வலி ஒரு புறம், இயலாமை மறு புறம் என்று தடுமாறினாள்.
ஆனால் அவனோ எந்தவித கிலேசமும் இன்றி, குளியலறைக்குச் சென்றவன், சற்று நேரத்தில் வெளியே வந்தான். அவன் கதவைத் திறக்கும் போதே இவள் உடல் உதறி நடுங்கியது.
கண்ணிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. தன் உடலை மறைக்கவேண்டும் என்று புத்தி சொன்னது. ஆனால் உடல் அதற்கு ஒத்துழைக்க மறுத்தது. சிரமப் பட்டு எழுந்தமர முயன்றவள் முடியாமல் படுக்கையின் பின்புறமாகவே விழுந்தாள்.
வெளியே வந்தவனின் விழிகள் மிளிர்ம்ருதையை அலட்சியமாக ஏறிட்டன. அவள் நிலைகண்டும் அவனுடைய கல் மனம் சிறிதும் கரையவில்லை. மாறாக மேலும் நெருங்க, அதிர்ந்துபோனாள் அவள்.
“நோ… கி… கிட்டே வராதீர்கள்…” என்று அச்சத்துடன் திணறியவளை அலட்சியம் செய்தவனாக, மீண்டும் அவளை உடலாலும் உளத்தாலும், உணர்வாலும் நசுக்கத் தொடங்கினான். என்ன இப்போது அவனுடைய கடுமை சற்றுக் குறைந்திருந்தது. ஆனாலும் அவனுடைய உடல் படும்போதெல்லாம் அவளுக்கு நெருப்பைக் காய்ச்சி உடலில் ஊற்றியது போன்ற உணர்வில் துடித்துப்போனாள். மறுக்க முடியாமல், தடுக்க முடியாமல் தவிர்த்துத் துடித்தவளுக்கு நரகம் என்றால் என்ன என்பது அன்று தெரிந்தது.
எல்லாம் ஓய்ந்து, பிடுங்கி எறிபட்ட கொடியாகக் கிடந்தவளுக்கு மீண்டும் உணர்வு தப்பியது. விழிப்பு வந்து சிரமத்துடன் தலையைத் திருப்பிப் பார்த்தாள். அவனைக் காணவில்லை.
மாபெரும் நிம்மதி எழ, தடுமாறிய உடலையும், உள்ளத்தையும் நிலை நிறுத்த முயன்றவாறு படுக்கையை விட்டு எழுந்தாள். உடலின் வலி மரத்துப் போனது. அதீத வலியில் உடல் மரத்துப்போகுமாமே. அவளுக்கும் அப்படித்தான் போலும். இயங்க மறுத்த கரம் கொண்டு, போர்வையை எடுத்துத் தன் உடலை மறைத்தவள், குளியலறை நோக்கிப் போனாள்.
அவள் கட்டுப்பாட்டையும் மீறி நடை எங்கோ போனது. எப்படியோ குளியலறைக்குள் நுழைந்தவளுக்கு அழ கூடத் தோன்றவில்லை. ஆனால், அவன் தொட்ட உடலை மட்டும் தேய்த்துக் கழுவவேண்டும் என்கிற உந்துதல் தோன்ற, ஷவரின் கீழ் நின்று குளிர் நீரைத் திறந்து விட, சுள்ளென்று பாய்ந்த நீரில் உடலெல்லாம் தீபட்டாற் போல் எரிந்தது. இதழ் கடித்துத் தன் வலியை அடக்கியவளுக்கு, அத் தண்ணீருக்குப் போட்டியாக அதுவரை அடைத்து வைத்திருந்த கண்ணீர் பொங்கி வழியத் தொடங்கியது.
தேகமெல்லாம் காயம் பட்டு எரிந்தாலும், அந்த அழுகையினூடே தேய்த்துத் தேய்த்துக் கழுவினாள். உடல் வலித்ததன்றி, அவனுடைய ஸ்பரிசத்தின் நினைவை அவளால் சற்றும் கழுவியெறிய முடியவில்லை.
சற்று முன் நடந்ததுதான் தாம்பத்தியம் என்றால், அந்தத் தாம்பத்தியம் அவளுக்கு வேண்டியதில்லை. இனியும் ஒரு முறை அவன் அருகாமையை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதை விடத் தீயேற்றி தன்னை மாய்த்துக்கொள்வது சுகமானது…’ என்று எண்ணியவளுக்கு அவனை நினைத்துக் கற்பனையில் திளைத்தது நினைவுக்கு வந்தது. கூடவே அவள் கற்பனையில் கண்டு கழிந்த மகிழ்ச்சியும் நினைவுக்கு வர, அது வரை அடக்கிவைத்திருந்த வேதனை பிரளயமாகக் கிளம்ப, அப்படியே ஷவரின் தரையில் தொப்பென்று அமர்ந்தவள் தன்னை மறந்து வீரிட்டு அழத் தொடங்கினாள்.
எத்தனை நேரமாக அப்படியே கதறியவாறு கிடந்தாளோ தெரியாது. கண்ணீர் வற்றியும், கதறல் அடங்கியும் உள்ளத்தில் எழுந்த வேதனையின் அளவு இம்மியும் குறையவில்லை.
குளிர்ந்த உடல் மேலும் குளிரத் தொடங்க எப்படியோ நினைவு பெற்றுத் தள்ளாடியவாறு எழுந்தாள். மனதின் வலியை விட, உடலின் வலியொன்றும் அவளுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. மெதுவாக நடந்து சென்று அங்கிருந்த துவாயைத் தன் ஆடையாக்கி அறைக்குள் வந்தபோது, இன்னும் அவன் வந்திருக்கவில்லை.
மீண்டும் கண்கள் கரித்துக்கொண்டு வர, படுக்கையை நெருங்கியவளுக்கு, சற்று முன் சிதைக்கப்பட்ட அவளுடைய கன்னிமைக்கான ஆதாரங்கள் கறையாய் படுக்கையிலிருப்பதைக் கண்டதும் வேதனையும் இயலாமையும் வலியும் ஒன்றாய்ப் போட்டிபோட்டுக்கொண்டு வந்தன. இப்படிச் சிதைந்துபோவதற்காகத்தானா பெண்மையைப் பாதுகாத்தாள்? சிதைந்தது கன்னிமை மட்டும்தானா? அவளுடைய நம்பிக்கை, காதல், வாழ்க்கை, இன்பம், எல்லாமே ஒட்டுமொத்தமாகச் சிதைந்து போய்விட்டதே… இதற்கு யார் பதில் சொல்லப் போகிறார்கள்?
நெஞ்சமெல்லாம் ரணமாகிப்போக, சற்றுமுன் கணவன் என்கிற பெயரில் அவள் உலகத்தையே நாசமாகியவனின் நினைவு வர, அவளையும் மீறி ஆத்திரம் கட்டுக்கடங்காமல் பிறக்க, படுக்கையில் கிடந்த விரிப்பை ஆவேசத்துடன் இழுத்துத் தூர எறிந்தவளுக்கு, அதுவே மலையைப் புரட்டிப்போட்ட வலியையும் களைப்பையும் கொடுத்தது. தன்னைக் காப்பாற்ற முடியாமல் போன தன் பலவீனத்தின் மீது கோபம் வர, அழுத்தவாறே படுக்கையில் விழுந்தவளுக்குக் கண்ணீருடன் தாமாக விழிகள் மூடிக்கொண்டன. அது களைப்பினால் வந்த உறக்கமா, இல்லை இதற்கு மேல் சிந்திக்க முடியாது என்பதனால் வந்த களைப்பா, இல்லை இது வரை பட்ட வேதனை போதும் என்று மூளை எண்ணியதால் வந்த மயக்கமா… கடவுளுக்குத்தான் தெரியும். வெளி உலகம் இருட்டாகிப் போனது அவளுக்கு.
(8) மிளிர்ம்ருதையும், விக்னேஷ்வரனும் வீடு வந்து சேரும் வரை எதுவும் பேசவில்லை. இருவரும் பல்வேறு பட்ட உணர்ச்சிக்கொந்தளிப்பில் சிக்கியிருந்ததால்,…
(41) “எப்படி இருக்கிறாய்?” அழுத்தமான குரல் வர, அவனை நிமிர்ந்த பார்க்கும் சக்தியற்றுத் தலையை மட்டும் ஆட்டி, “இ... இருக்கிறேன்...”…
(6) சூரிய வெளிச்சம் அந்த அறைக்குள் நுழைந்து, விழி மூடிக் கிடந்தவளின் காயப்பட்ட உடலின் மீது சற்றுக் கடுமையாகத்…
(39) இரண்டு மாதங்களுக்குப் பிறகு, “ஷ்... விக்டோரியா... டோன்ட் க்ரை... மை லிட்டில் பேபி பம்கின்...” என்று கீழே விழுந்து…
(38) ஆடிப்போனாள் திகழ்வஞ்சி. ஓடிச்சென்று அவனிடமிருந்து பறிக்கவும் முடியாமல், அவன் அதைப் பார்த்துவிடக் கூடாதே என்கிற நடுக்கத்தோடு முகம் வெளிற…
(4) எல்லா நாட்களும் ஒரே நாள்தான். ஆனால் திருமண நாள் என்பது… அது ஒவ்வொரு இளம் பெண்களின் வாழ்விலும்…
View Comments
பாவம் மிளிர்
ரொம்ப பாவம்பா