மெல்லிய முனங்கலுடன் வலித்த தலையைப் பற்றியவாறு விழிகளைத் திறந்தாள் சமர்த்தி.
முதலில் மங்கலாகத் தெரிந்த உலகம் மெல்ல மெல்லத் தெளிவாக, எழுந்தமர்ந்தவளுக்கு அந்தப் புதிய சூழ்நிலை உறுத்தியது.
பதறி அடித்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தாள். எதிர்பாராத அந்த அதிர்ச்சியில் மீண்டும் தலை சுழற்றியது.
ஒரு நிலையிலில்லாது சுழன்று கீழே விழ முயன்ற தலையை, இரு கரங்களாலும் பற்றிக் காத்துக்கொண்டவளுக்குச் சற்று நேரம் எடுத்தது சற்றுத் தெளிவாக.
மூச்சு ஓரளவு சமப்பட, சூழ்நிலை உணரும் பொருட்டு, விழிகளை மெதுவாக உயர்த்திப் பார்த்தாள். அப்போது தட்டுப்பட்டான் அவன்.
அவனைக் கண்டதும் அதுவரையிருந்த மந்தநிலை மாயமாகிப்போக, அங்கே உயிரை உறைய வைக்கும் அச்சம் சுருள்பந்தாய் மார்பைத் தாக்கியது.
கண்முன்னால் நிற்பது அவன்தானா? நம்ப முடியாதவளாகத் தன் விழிகளைச் சிமிட்டிப் பார்த்தாள். சந்தேகமேயில்லை. உத்தியுக்தன்தான். காலுக்கு மேலாகக் காலைப் போட்டவாறு மிக அலட்சியமாக இருக்கையில் சாய்வாக அமர்ந்து இருந்தான். விழிகளோ இவளை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தன.
அந்த விழிகளில் தெரிந்தது என்ன? பழி வெறியா? கொலை வெறியா? எரித்துச் சாம்பலாக்கும் வெறியா? இல்லை அனைத்தும் சேர்ந்த கலவையா?
தெரியவில்லை. ஆனால் ஊசியாகக் குத்தும் அவனுடைய விழியின் வீச்சில் சர்வமும் நடுங்கிப் போனாள் சமர்த்தி.
அவனோ, அவள் விழிப்படைந்ததும், தன் இலகுநிலை மாறிப் பரந்து விரிந்த மார்பின் மீது கரங்களைக் கட்டியவாறு,
“ஹாய்… ஹவ் ஆர் யு…? வேல் கம் டு ஹெல்” என்றான் பெண்களைக் கவர்ந்திழுக்கும் ஆண்மை ததும்பிய குரலில்.
முன்பு அவனைப் பற்றித் தெரிய முதல், அந்தக் குரலைக் கண்டு மயங்கியிருக்கிறாள். அந்தக் குரலுக்காகவே திரும்பத் திரும்ப அவனுடைய பேட்டிகளைக் கேட்டு சிலிர்த்திருக்கிறாள். அடி வயிற்றில் எழும்பும் பட்டாம்பூச்சியின் சிறகடிப்பில் சிலிர்த்தவாறு ரசித்தும் இருக்கிறாள்.
ஆனால் இப்போது..! அந்தக் குரல் அவளுடைய நம்பிக்கையையும் திடத்தையும் மொத்தமாய்ச் சுக்குநூறாக உடைப்பது போலத் தோன்றியத. அந்த அளவுக்கு அக் குரலில் அழுத்தமும், கடுமையும் இருந்தது.
அதுவும் கம்பீரமான அந்த உதடுகளில் தெரிந்த ஏளனப் புன்னகை இவளுக்குப் பெரும் பீதியைக் கிளப்பியது. உடல் வெளிப்படையாகவே நடுங்க. காய்ந்துபோன தொண்டையை உமிழ்நீர் கூட்டி விழுங்கியவள், அவன் கேட்டதற்கு பதில் கூறாமல், எழ முயன்றாள்.
“ஹே… இட்ஸ் ஓகே… சிட் டவுன்…” என்று அவன் சொன்ன விதத்தில் பட்டென்று அமர்ந்து கொண்டாள் சமர்த்தி.
அந்தக் குரல் மிக மென்மையாகக் கூறுவது போலத்தான் தெரிந்தது. ஆனால், நிஜத்தில் அவளுடைய ஈரக்குலையையே ஓரு ஆட்டம் ஆட்டு வித்தது.
உதடுகள் காய்ந்து போக, தொண்டை வறண்டு போக, புத்தி மழுங்கிப் போகக் கிலியுடன் அவனைப் பார்த்தவள்,
“ஏ… ஏன்… எதற்காக… எ… என்னை எதற்காக இங்கே அ… அழைத்து வந்தீர்கள்” என்றவளுக்கு கடத்தி வந்தாய் என்று கூடக் கேட்க முடிந்திருக்க வில்லை.
அதை உணர்ந்தான் போல, இளநகையுடன் அவளை பார்த்து,
“சினேக் அண்ட் லாடர் விளையாடி இருக்கிறாயா? நான் சின்ன வயசில் விளையாடியது. திடீர் என்று அது விளையாடவேண்டும் போல ஆசை வந்ததா…” என்றவன் மெல்லியதாகக் குலுங்கிச் சிறிது “உன்னைக் கடத்தி வந்தேன்… இருவரும் விளையாடலாமா?” என்று கேட்க இவள் முகம் மேலும் வெளிறிப்போனது.
அதைக் கண்டு சுவாரசியமாகத் தலையைச் சரித்து அழகிய வரிசை வெண்பற்கள் தெரியுமாறு சிரித்தவன், தன் காந்தப் பார்வையை அவள் மீது செலுத்த இவளுக்கோ பீதியில் வயிற்றைக் கலக்கியது. சிரமப்பட்டுத் தன் நடுக்கத்தை மறைத்தவள், முடிந்த வரை வேகமாகப் படுக்கையில் இருந்து எழுந்து ஓரடி எடுத்து வைப்பதற்குள், தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.
நிலையில்லாது தள்ளாடிய உடலை அவள் நிலைப்படுத்துவற்குள்ளாக இருக்கையை விட்டு எழுந்தவன், ஓரெட்டில் அவளை நெருங்கி, அவளுடைய மேல் கரங்களை அழுந்தப் பற்றி,
“ஹே… ரிலாக்ஸ்… நோ ரஷ்” என்று மீண்டும் படுக்கையில் அமர்த்த அந்தக் கனிவும் இதமும் அவளை அமைதிப் படுத்துவதற்குப் பதில், மேலும் பயத்தைத்தான் கிளப்பியது.
மூர்க்கமாய் நடந்தால் மோதி விடலாம். கோபமாய் நடந்தால் கொதிப்புடன் கொந்தளிக்கலாம்… ஆங்காரமாய் நடந்தால் அசுரத்தனமாய் பதிலடி கொடுக்கலாம்… ஆனால் இப்படிச் சிரித்துப் பேசும் எதிராளியை எப்படி எதிர் கொள்வது? சிரிக்காமல் கோபத்தைக் காட்டுபவனை விட, இப்படி சிரித்துச் சிரித்து கோபத்தை காட்டும் எதிரி மிக மிகப் பயங்கரமானவனவனாயிற்றே.
அடுத்து அவன் என்ன செய்யப்போகிறானோ என்கிற கலக்கத்தில் நிமிர்ந்து அவனைப் பார்க்க, மெதுவாக நடந்து வந்தவன் அவளுக்கு அருகாமையில் அமர்ந்தான்.
ஏதோ தீ சுட்டதுபோலப் பதறி அடித்துப் பின்னால் சென்று தலைமாட்டடியில் கால்களை மடித்துக் கூனிக் குறுகி ஒடுங்கியவாறு அமர்ந்து அவனை ஏறிட, அவனோ கொஞ்சம் கூட இரங்காதவனாக அவளை வெறித்தான்.
அந்தப் பார்வை சொன்ன மொழியில் உயிர் ஊசலாட, குளிர்காய்ச்சல் வந்தவள் போல நடுங்கத் தொடங்கினாள்.
அதைப் பரிதாபம் போலப் பார்த்தவன்,
“ஹே… ரிலாக்ஸ்… எதற்கு இத்தனை அச்சம்…” என்றவன் அவளை மேலும் நெருங்கி, அவள் முகத்தை மறைத்து விழுந்திருந்த கூந்தலை ஒற்றை விரலால் ஒதுக்கி விட முயல, அவன் விரல்கள் தீண்டும் முதலே தன் தலையைத் திருப்பிக் கொண்டாள் சமர்த்தி. விழிகளோ அச்சத்தில் சிவந்து கண்ணீரைச் சொரியத் தயாரானது.
அவன் எதற்காக அவளைக் கடத்தி வந்து இருக்கிறான் என்பதை அறிய அத்தனை பெரிய மூளை ஒன்றும் வேண்டியதில்லையே. அவளை அவன் கண்டுகொண்டான் என்பதைச் சொல்வதற்கு இதை விட ஆதாரம் என்ன வேண்டும்?
நெஞ்சம் அடைத்துக் கொண்டு வர, திரும்பி அவனைப் பார்த்தவள், கன்னத்தில் வழிந்த கண்ணீரோடு,
“த… தயவு செய்து என்னை விட்டுவிடு…” என்றாள் அழுகையின் ஊடே.
“என்னது விடுவதா? இன்னும் நான் ஆரம்பிக்கவே இல்லையே! ஆனால் பயப்படாதே… நான் அந்தளவுக்கெல்லாம் வில்லன் கிடையாது… இந்தக் கதைக்கு நான்தான் ஹீரோ… அந்தக் கெத்தை காத்துக் கொள்ள வேண்டுமே… இல்லை என்றால் பொங்கல் புளியோதரை வைத்துவிடுவார்கள்… நீ வைத்த பொங்கலைத் தின்றே இன்னும் செரிக்காமல் திணறுகிறேன்… இதில் அதுவும் சேர்ந்தால் அவ்வளவுதான்” என்று தோள்களைக் குலுக்கியவாறு சொன்னவன், கட்டிலை விட்டு எழுந்து, அங்கிருந்த மேசையை நோக்கிச் சென்றான்.
தன் இடதுகரத்துச் சுட்டுவிரலால் அந்த மேசையின் இழுப்பறையை இழுத்துக்கொண்டே,
“உனக்கு உன்னுடைய அண்ணா அண்ணிமீது கொள்ளை பிரியமல்லவா? அவர்களுக்கு ஒன்று என்றால் நீ துடித்துப்போவாய் தானே…” என்றவனின் தொனியில் அவளுக்கு இரத்தமெல்லாம் வடிந்து போன உணர்வு. தடுமாற்றத்தோடு படுக்கையை விட்டு எழ முயல, அவளை அழுத்தமாகப் பார்த்தவன், தன் வலது கரத்தைத் தூக்கிச், சுட்டு விரலால் அவளை அமருமாறு சைகை செய்ய, மீண்டும் படுக்கையில் அமர்ந்தாள் சமர்த்தி.
அவனுடைய வார்த்தை கொடுத்த வீரியத்தை விட, அவனுடைய சுட்டுவிரலின் வீரியம் அதிகமாக இருந்தது.
“எழும்பாதே… கீழே விழுந்து வைக்கப் போகிறாய்… உனக்கு போட்ட மருந்தின் வீரியம் சற்று அதிகம். அது உடலை விட்டு நீங்க சற்று நேரம் எடுக்கும்…” என்றவாறு இழுப்பறையிலிருந்து தங்க நிற மினுமினுப்புத் தாளினால் அழகாக்கப் பொதிசெய்த ஒரு பரிசுத் சுருளை வெளியே எடுத்துச் சமர்த்தியை நோக்கி விட்டெறிய, அது கச்சிதமாக அவளுடைய மடியில் வந்து விழுந்தது.
“கடந்த இரண்டு வருடங்களாக உன்னிடம் கொடுப்பதற்காக வைத்திருக்கிறேன். திறந்து பார். உனக்குப் பிடித்தமான பரிசுதான்… ச..ம..ர்..த்..தி… ஐ மீன் சல்மா ஓர் லின்டா லீசி” என்றவனுடைய உதட்டில் மீண்டும் புன்னகை எட்டிப்பார்க்க, அந்த சல்மா என்கிற பெயரில் தூக்கிப் போட்டது சமர்த்திக்கு.
அவனுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது. அடி முதல் நுனி வரை அத்தனையையும் அலசி அராய்ந்து தான் கடத்தியிருக்கிறான். அதுவும் அவளுடைய பெயரை எத்தனை தெளிவாக உச்சரிக்கிறான்.
கடவுளே கடைசிவரைக்கும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணினாளே… கடைசியில் இப்படி சிக்கிக்கொண்டேமே…
நடுக்கத்தோடு அவனைப் பார்க்க. அந்த விழிகள் இரையைக் கண்டபுலியின் பார்வைபோல அவளைக் கடுமையாக வெறித்தன.
தொண்டை வறளக் கைகால்கள் சில்லிட, நடுங்கிய கரம் கொண்டு அந்தச் சுருளைத் தூக்கியவளுக்கு இதயம் படு வேகமாக அடிக்கத் தொடங்கியது.
உள்ளே என்ன இருக்கும் என்று அறியாத அளவுக்கு ஒன்றும் அவள் முட்டாள் அல்லவே. ஆனால் அதைத் திறந்தால் வரும் பூதத்தை எப்படி சமாளிப்பது என்றுதான் அவளுக்குப் புரியவில்லை.
தவிப்புடன் கண்களில் கண்ணீர் குளம் கட்ட, கட்டாயம் திறந்து பார்க்கவேண்டுமா என்பதுபோல இவனைப் பார்த்தாள்.
“கமான்… ஓப்பன் இட்…” என்று கூறிவிட்டுத் தன் நெற்றியில் விழுந்த முடியை ஒதுக்கியவனின் விரல்கள் அவனையும் மீறி அங்கிருந்த காயத்தில் படிய, அவனுடைய முகம் திடீர் என்று இறுகிக் கறுத்துப் போனது.
மாறாத வடுவைக் கொடுத்தவள் அல்லவா அவள். அதை மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாதே. அந்த நிலையிலும் மனம் அன்று நடந்ததை அசைபோடத் தொடங்கியது.
அன்று முக்கிய வியாபார நண்பரைச் சந்திப்பதற்காக இங்கிலாந்து வந்திருந்த நேரம், அவரைச் சந்திப்பதற்காகச் சென்றவன், அரைவழியில் அவருக்குத் திடீர் என்று தவிர்க்க முடியாத வேலை வந்துவிட, இவனிடம் மன்னிப்பு வேண்டியவர் மாலை தானே வந்து சந்திப்பதாகக் கூறிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்.
போன காரியம் நிறைவேறாத எரிச்சலோடு மீண்டும் விடுதிக்கு வந்தான் உத்தியுக்தன்.
அன்றைய நாள் இப்படி வீணாகப் போயிற்றே என்று எரிச்சல் பட்டவாறு, அறையைத் திறக்க, யாரோ ஒருத்தி முக்காடு அணிந்தவாறு கட்டிலை விரிப்பதுபோல நிற்பதைக் கண்டு முதலில் குழம்பினான்.
அதுவும் அந்தப் பெண்ணிடமிருந்த மெல்லிய பதட்டம், இவனுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்த, முதலில் திருட வந்தவள் என்றுதான் நினைத்தான். ஆனால் அந்த விழிகள்… அது திருடும் விழிகள் அல்ல. அதையும் மீறி ஆராயும் விழிகள். அப்போதுதான் அவனுக்குப் பொறி தட்டியது, அது எங்கிருந்தோ அனுப்பப்பட்ட அம்பென்று. ஆனால் சுதாரிப்பதற்குள் மேசை விளக்கால் அடித்துவிட்டு ஓடிவிட்டாள்.
அந்தச் சின்ன உருவம் அத்தகையே வேகத்தோடு நடந்துகொள்ளும் என்று அவன் எண்ணவேயில்லை. அவள் அடித்துவிட்டுத் தப்பிய பின் நெற்றியிலிருந்து கொடகொட என்று இரத்தம் வடியத் தொடங்க அவளைத் தொடர்ந்து போக முடியாமல் வைத்தியரை அழைக்க வேண்டியதாயிற்று.
வந்தவர் இரண்டு தையலைப் போட்டுவிட்டுச் சென்றார். அப்போது கூட அவன் பாரதூரமாக எதையும் நினைக்கவில்லை. இதுவரை எந்தப் பிரச்சனைக்குள்ளும் சிக்காதவன்… அன்றுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பதை புரிந்து கொண்டான். வாழ்க்கையிலும் முதன் முறையாக சறுக்கிப்போய் செய்வதறியாது நின்றான். அதுவும் எத்தனைப் பெரிய சறுக்கல் அவனுக்கு.
அந்த நேரத்திலும், இங்கிலாந்தில் தன் பெண் தோழியோடு வந்திருந்த அவனுடைய தம்பி அவ்வியக்தன் இவனைப் பார்க்க வந்தபோது கூட, இவனையும் அவனையும் கோர்த்துப் பத்திரிகையில் இத்தகைய கீழ்த்தரமான செய்தி வரும் என்று கனவிலும் என்னவில்லையே.
அவனும் அவனுடைய தம்பியும் இப்படி சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. இவன் செல்லும் நாடுகளுக்கு அருகாமையில் அவ்வியக்தன் நின்றிருந்தால், இவனைக் காண வந்துவிடுவான். நேரம் கிடைக்கும் வேளைகளில் ஒன்றாக உணவு அருந்தச் செல்வதும் உண்டு. சிலவேளைகளில் அவ்வியக்தனின் பெண் தோழிகளும் வருவதுண்டு. உத்தியுக்தன் அரசியலில் இறங்கியபின் முன்னையதைப் போல அடிக்கடி தம்பியை சந்திப்பதில்லை என்றாலும், வாய்ப்புக் கிடைக்கும்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து அளவளாவுவார்கள்.
அப்படிதான் இவன் லண்டனுக்கு சென்றபோது அவ்வியக்தனும் அங்கே இருந்ததால் எப்போதும் போல இவனை பார்க்க வந்தான். அதை இவன் என்று நினைத்து நன்கு ஆராயாமல் கட்டுரையை எழுதி பிரசுரிக்க, பிறகு என்ன…! அவன் செய்யாத தவற்றைச் செய்ததாக எதிர்க்கட்சியாளர்கள் அவனை நாறடிக்க, அந்தக் கணம் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்து விலகினான்.
அவன் அரசியலுக்குள் புகுந்ததற்குக் காரணமே வில்லியம் நேக்கரை வீழ்த்தி ஒழிக்கத் தான். கடைசியில் இவன் மூக்குடைபட்டு விலகவேண்டியது ஆயிற்று. ஆனாலும் அந்த ஏமாற்றத்தை இந்தக் கணம்வரை அவனால் மறக்க முடியவில்லை.
அதுவும் அவனைப் போற்றிய மக்கள், கண் சிமிட்டும் விநாடியில் எதிரியாகப் பார்த்தபோது இவனால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. இவ்வளவு ஏன், அவனைக் காதலித்த ஜுலியட் கூட அவனை நம்பவில்லையே. அவன் முகத்தில் செய்திப் பத்திரிகையை விட்டெறிந்துவிட்டு, நீ எப்படி என்னை ஏமாற்றலாம்… நம்பிக்கைத் துரோகி” என்றுவிட்டு வெளியேறியபோது அவன் பட்ட அவமானம். வலி… இப்போது நினைத்தாலும் உடல் திகு திகு என்று எரியும்.
இனி அவளிடம் சென்று இந்த பத்திரிகையில் குறிப்பிடும் நபர் நான் அல்ல என் தம்பி என்று கத்தவா முடியும். அது அவனுடைய தம்பியின் வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து விடாதா.. கூடப்பிறந்த தம்பியாகவே இருந்தாலும், அவனுடைய வாழ்கையை விமர்சிக்க இவனுக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. தன்னை நிரூபிக்க வேண்டி தம்பியின் வாழ்க்கையை எப்படி வெளிச்சத்துக்கு கொண்டுவருவது. அத்தனை சுயநலவாதியா அவன்?
தன் நிலைக்குக் காரணமான அந்த நபர் மீது இவனுடைய மொத்தக் கோபமும் திரும்பியது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் நீண்ட பெரிய இரு விழிகள்தான். என்று அந்த விழிகளைக் கண்டானோ, அன்று தொலைத்த தூக்கம் இதுவரை வந்ததில்லை.
அந்த விழிகளை வைத்து எப்படிக் கண்டு பிடிப்பது? தேடினான். விசாரித்தான். ஆறு மாதங்களின் பின்தான் அந்த நபர் யார் என்றே தெரிந்தது.
உடனே பதிலடி கொடுக்க முடியாமல் காலம் அவனை சோதிக்க, அவனை சூழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் தீர்வு கண்டு, நொடிந்த வியாபாரத்தை மீண்டும் நிலைப்படுத்தி நிமிர்ந்த போது இரண்டு வருடங்கள் ஓடிவிட்டிருந்தன.
அந்த இரண்டு வருடங்களும் எத்தனை பெரிய நரகத்துக்குள் இருந்தான் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும். அதற்குக் காரணம் இவள்தானே. ஆத்திரம் சற்றும் மாறாமல் மார்புக்குக் குறுக்காகக் கரங்களைக் காட்டியவாறு விழிகளில் எரிதணலைக் கக்கியவாறு வெறித்துப் பார்க்க, அவளோ, அவனைப் பரிதாபமாகப் பார்த்தாள்.
இதற்கு என்ன பதிலைக் கூறுவது என்றும் தெரியவில்லை. அவள் செய்தது ஒன்றும் சாதாரன தவறில்லையே மன்னித்து விட்டுவிட. இது மாபெரும் குற்றமாயிற்றே. திக்கித் திணறியவளாக.
“ஐ… ஐ ஆம் சாரி… ரியலி.. ரியலி சாரி… நான் செய்தது தவறுதான்… நிஜமாகவே நான் வருந்துகிறேன்… நம்புங்கள்…” என்று செய்வதறியாது கெஞ்சியவளை அழுத்தமாகப் பார்த்தான் அவன். விழிகள் மேலும் கூர்மையாகி அவளைத் துளைத்தன.
“அப்படியானால் என் மீது தவறில்லை என்று உனக்கு முன்பே தெரிந்திருக்கிறது. அப்படித் தானே…” என்று பற்களைக் கடித்தவாறு கேட்க, இவளோ மீண்டும் தலை குனிந்தாள்.
அதைக் கண்டதும் முகம் கறுக்க,
“எப்போது தெரியும்…?” என்று கேட்டபோது அந்த கேள்வியில் பிறந்த சூடு இவளை எரிக்கப் பதில் கூற முடியாமல் கண்கள் கலங்க நின்றாள் சமர்த்தி. அவளை ஆக்ரோஷமாகப் பார்த்தவன்,
“கேட்டேன்… எப்போது தெரியும்…” என்றபோது அதற்கு பதில் கொடுக்கவில்லை என்றால், நிச்சயமாக அவள் பற்களை உடைப்பான் என்கிற அச்சம் தோன்ற
“ஒரு… ஒரு சில மாதங்களில்…” என்றதும் இவனுடைய உடல் மேலும் இறுகியது.
“காட்… ஐ… காண்ட் பிலீவ் திஸ்…” என்றவன் ஆத்திரத்தோடு அவளை நெருங்கியவாறு,
“தெரிந்திருந்துமா அதற்கு மறுப்பாக ஒரு கட்டுரை கூட உன்னால் எழுதிப்போட முடியல்லை?” என்றபோது ஆத்திரத்தில் இவன் உடல் கூட நடுங்கியது.
“சாரி… நான்… என்னால்… மறுப்பாக…” என்று திக்கித் திணறியவளுக்கு வார்த்தைகள் வந்தால் அல்லவோ. எப்படி சொல்வாள்?
உண்மையைச் சொன்னால் என் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் குறைந்துபோகும், எதிர்க்கட்சி கொடுத்த பணத்தை திருப்பி கேட்கும், அவர்களால் என் குடும்பத்துக்கே ஆபத்து ஏற்படும்… இந்த அச்சத்தால் கண்டும் காணாதவளுமாக அப்படியே விட்டுவிட்டேன் என்று எப்படித் துணிந்து சொல்லுவாள்? மீன்டும் கண்ணீர் பொழிய பதில் சொல்ல முடியாது தவித்தவளை வெறுப்போடு பார்த்தான்.
“எதிர்க்கட்சி உனக்கு எவ்வளவு பணம் கொடுத்தது…” என்று முக்கிய புள்ளியைப் பிடித்துக் கேட்க அதற்கும் பதில் சொல்ல முடியாமல் திணறினாள் சமர்த்தி.
அவள் பக்கம் நியாயமிருந்தால் அந்த நியாயத்தைக் கூறி நவீன கண்ணகியாக மாறி இருக்கலாம். ஆனால் அவள் கிரகம் இந்தப் பக்கம் திரும்பினாலும் இவளுக்கு எதிராக அல்லவா இருக்கிறது. ஒரு சதவிகிதம் கூட இவளுக்குச் சார்பாக இல்லையே. அவன் எந்தக் கேள்வி கேட்டாலும் துணிந்து பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லையே. திணறிப்போக,
“என் கேள்விக்கான பதில் இன்னும் எனக்கு வரவில்லை…” என்றான் காட்டுத் தீயாக. அது இவளையும் எரிக்க, உதடுகள் நடுங்க,
“ஒரு…” என்றவள் சொல்ல முடியாமல் எச்சியைக் கூட்டி விழுங்கிவிட்டு,
“ஒரு… மில்லியன்…” என்றபோது வெறும் காற்று தான் வந்தது. அதைக் கேட்டதும், கடகவென்று சிரிக்கத் தொடங்கினான் உத்தியுக்தன்.
“வட்… ஜெஸ்ட் வன் மில்லியன்… ஹா ஹா ஹா… மை காட்… வெறும் ஒரு மில்லியன் டாலர்கள் தானா அந்த நிகழ்பதிவுக்கான பணம்… ஹா ஹா ஹா…” என்று நகைத்தவன், பின் ஆத்திரத்துடன் அவளைப் பார்த்து,
“முட்டாள்… அந்த நிகழ்பதிவின் பெறுமதி என்னவென்று உனக்குத் தெரியுமா? என்னைப் பதவியிலிருந்து தூக்க வைத்தது மட்டுமல்லாமல், என் வியாபார சாம்ராஜ்யத்தையும் அழிக்கக் காரணமாக இருந்த அந்த நிகழ்பதிவு வெறும் ஒரு மில்லியன் டாலர் தானா… இதை விடக் கேவலம் எனக்கு எதுவும் இருந்துவிட முடியாது…” என்று சீறியவனுக்கு ஆத்திரம் கட்டுப்பட மறுத்தது.
உடம்பெல்லாம் யாரோ அமிலம் ஊற்றியது போல எரிந்தது. சற்று நேரம் அங்கும் இங்கும் நடந்தவன், என்ன நினைத்தானோ, நின்று நிதானமாகச் சமர்த்தியை ஏறிட்டான்.
அடுத்து, நிதானமாகத் தன் மேல் சட்டையின் பொத்தான்கள் ஒவ்வொன்றாகக் கழற்றத் தொடங்கினான். அவனுடைய முடியடர்ந்த மார்பு கொஞ்சம் கொஞ்சமாக வெளியே தெரிய இவளுக்கு ஐந்தும் கேட்டு அறிவும் கேட்டது.
பதறியவளாகப் படுக்கையிலிருந்து எழ, அவனோ அவளை அலட்சியமாகப் பார்த்து,
“ஏன் எழுந்துவிட்டாய்… உட்கார்…? தூரத்தில் இருந்து பார்த்துதானே அந்தக் கட்டுரையை எழுதினாய்… இப்போது நேரடியாகவே அதை அனுபவித்துவிட்டுக் கட்டுரையை எழுது… உனக்கு எதிர்க்கட்சி ஒரு மில்லியன் தானே கொடுத்தது… நான் பத்து மில்லியன் டாலர்கள் தருகிறேன். சாகும்வரைக்கும் பணத்துக்கு சிரமமில்லாமல் வாழலாம்…” என்று கூற அவமானத்தில் கூனிக் குறுக்கிப் போனாள் சமர்த்தி.
தன் பக்கம் நியாயம் இருக்கிறது என்று வாதாடக் கூட முடியாத நிலையில் அல்லவா அவள் இருக்கிறாள். அவனோ அடங்கா சீற்றத்துடன்,
“கட்டுரையில் என்ன எழுதியிருந்தாய்? ஒன்டாரியோ முதல்வராகப் போட்டியிட இருக்கும் உத்தியுக்தன் ஆதித்தனின் இரட்டை வாழ்க்கை அம்பலம். காதலி ஒருத்தியிருக்க வேற்றுப் பெண்ணுடன் கும்மாளம்… மக்களின் முன்னால் காதலியை நிச்சயித்தது வெறும் கண்துடைப்பு தானா… யாரை ஏமாற்ற இந்த நாடகம்…” என்று அவள் எழுதிய கட்டுரையின் முக்கிய வசனங்களைக் கோடிட்டுக் காட்டியவன், மீண்டும் முகத்தில் புன்னகையைத் தேக்கி,
“அதை நிரூபிக்க வேண்டாமா… பொய்யாகப் போட்ட கட்டுரையை மெய்யாகப் போட்டுவிட்டால் போயிற்று. தலைப்பை வேண்டுமானால் இப்படிப் போடலாமா? பெண் பித்தனான உத்தியுக்தன் மீது காமவயப்பட்ட பிரபலப் பத்திரிகை நிருபர்… நன்றாக இருக்கிறதா? ப்ச்.. எனக்கு என்னவோ மொக்கையாகத் தெரிகிறதே.. வேறு எப்படி எழுதலாம்… ம்… ஆ… உத்தியுக்தனின் விட்டுச் சென்ற காதலியின் இடத்தை நிரப்பிக்கொண்டார் பிரபலிய பத்திரிகை நிருபர்… படுக்கையில் அவரோடு உல்லாசம்… இது அருமையாக இருக்கிறது…?” என்று அவன் முடிக்கவில்லை, பதறித் துடித்தவளாகப் படுக்கையிலிருந்து இறங்கியவள், நடுக்கத்துடன் ஓட முயல, இவனோ பாதையை மறைத்து நின்று,
“எதற்கு இந்த நாடகம். அதுதான் பத்து மில்லியன் தருகிறேன் என்றுவிட்டேனே. பிறகு என்ன. உனக்கும் விளம்பரம். எனக்கும் விளம்பரம்…” என்றவன் அவளை விடுத்து அங்கிருந்த மேசையை நோக்கி நடந்தான். மேசையின் இன்னொரு இழுப்பறையைத் திறந்து அதிலிருந்து நிழல்பதிவுக் கருவியை வெளியே எடுத்து அதைத் தூக்கிக் காட்டினான்.
“ஹை டெஃபினிஷன் பிக்ஷர்… இரண்டு வருடங்களுக்கு முன்பு நீ எடுத்துப் போட்டாயே படங்கள்… அது எந்தக் கமராவிலிருந்து எடுத்தாய். படங்கள் நன்றாகவேயில்லை?” என்றவன் அந்த நிகழ் பதிவை உயிர்ப்பித்துச் சுலபமாகப் பதிவு செய்யும் வகையில் மேசையில் வைத்துவிட்டு, படுக்கையை அது சரியாக ஒளிப்பதிவு செய்கிறதா என்று பார்த்தான். திருப்தியுற்றவனாக இவளை நிமிர்ந்து பார்த்துப் புன்னகைத்தவன்,
“பேர்ஃபெக்ட்…” என்றான் புன்னகையுடன்.
(1) 1995 ஆம் ஆண்டு “என்னது… கந்தழிதரன் இங்கே வரப்போகிறானா?” இதைச்…
16 இருண்ட உலகம் மெதுவாக வெளித்ததோ, விழிகளுக்குள் ஊடுருவிய வெளிச்சத்தைத் தாங்கும் சக்தியில்லாமல் வழிகளை மூடி மூடித் திறந்தான் உத்தியுக்தன்.…
15 மறுநாள் காலை இதமான வெப்பத்தில் மெதுவாகக் கண்விழித்த சமர்த்திக்கு, முன்னிரவு நடந்தது நினைவுக்கு வந்தது. கூடவே உதட்டில் மெல்லிய…
(38) மறு நாள் காலை, தன் கணவனின் இறுகிய அணைப்பிலிருந்து பிரிய விரும்பாது விலகிய நிரந்தரியை மீண்டும் இழுத்துத்…
14 மறுநாள் வளைகாப்பு என்பதால், உத்தியுக்தனின் வேண்டுதலின் பெயரில், தயாளனின் குடும்பம் அங்கேயே தங்கிக்கொண்டது. காலை எழுந்து நாதஸ்வர ஓசை…
விநாடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணித்துளியாகியும் சர்வாகமன் வரவில்லை. எங்கே போனான்…? நேரம் போகப் போக நிரந்தரியின் அடிவயிறு இறுகி…
View Comments
அடிங்கொய்யாலே எம்பூட்டு கொழுப்பு இருக்கனும் இவனுக்கு.
பணமிருந்தா கடத்திட்டு வந்து என்ன வேணாலும் பண்ணுவியா டா மடப்பயலே.
அதென்ன டா பொண்ணுங்களை பழி வாங்கறேனு ஒவ்வொரு கெரகம் புடிச்சவனுங்களும் இதையவே பண்ணறீங்க😤😤😤😤😤😤😡😡😡😡😡😡😡😡.
இவுரு பெரிய மவுரிய ராசா.🤨🤨🤨🤨
கண்ணுக்கு கண் பல்லுக்கு பல்லு ன்னு நடந்துப்பானாம்.😠😠😠😠
நீங்களெல்லாம் அரசியல் வாதிங்க தானே. தொடைச்சிப் போட்டுட்டு போக வேண்டிய தானே.
ஒரு சின்ன விசயத்தை கூட சரி பண்ண முடியாம தோல்விய ஏத்துக்குறே. பதவிக்கு வந்தா எவ்வளவே பிராப்ளம் வரும் போகும். அப்பயும் இதேபோல கடத்தி வந்து தேவையில்லாத ஆணிய புடுங்குவியாடா மடச்சாம்பிரானி 🤬🤬🤬🤬
எலே... வேணாம்ல... பிச்சுபோடுவேன் பிச்சு. அவன் என்ன கஷ்டம் பட்டான்னு அவனுக்குத்தான்யா தெரியும். உங்க ஆளுக்கு வக்காளத்து வாங்க போயி, ஹீரோ ஆர்மிகிட்ட சிக்கிடாதீங்க. அம்புட்டுந்தேன்
அவனென்ன பெரிசா கஷ்டப்பட்டானாம் சொல்லுங்க பாக்கலாம்.
வயலுக்கு வந்தானா???
நாத்து நட்டானா???
இல்லை அங்கன கொஞ்சி விளையாடும் பொண்ணுங்களுக்கு
மஞ்சள் அரைச்சு தந்து வேலை செஞ்சான்னா???.
ஏதோ இவனோட தொம்பிய இவன்னு நெனைச்சு பத்திரிகைல போட்டுட்டா
அதுவும் அவளோட குடும்ப சூழ்நிலைக்காக தான்.
உண்மை தெரிஞ்சதும் மறுப்பு சொல்லோனுமாமே இவனுக்கு 😠 😠 😠 😠 😠.
இவன் இப்ப கடத்தி குடும்பத்தை மொரட்டுற மாதிரி அப்ப எதிர்கட்சி காரனுங்க சத்திய குடும்பத்தோட கொன்னிருப்பானுங்க.
இதைக் கூட இவனால புரிஞ்சுக்க முடியாதா???!😠😠😠.
எதுவா இருந்தாலும் பேசி சரிபண்ணாம அதென்ன இரண்டு வருசம் போயி கடத்தறது.😬😬😬😬.
இதெல்லாம் சரியில்லை டூ மச்சூ 😤😤😤😤😤
ஹா ஹா ஹா யோவ் ஒரு நியாயம் வேணாமாயா. உங்க ஈரோயினிக்கு நீங்க செம்பு தூக்கலாம் தப்பில்ல. ஆனா இம்மாம் பெரிய சொம்பு தூக்கிறது டு மச். டுடுடுடுடு மச் சொல்லிபுட்டேன்.
Hello Echoose me… Hero army inge irukken… Unga eeeravengayam pannathu kutram illaiya???? Unmai therinjum maruppu katturai kodukkala kaasukku vilai poitta.. 😏😏😏
வாயா வாயா வாயா என் செல்லக் கட்டி. இந்த வைஷூவோட ஆட்டம் ரொம்ப ஓவராதான் போயிடுச்சு. கேளுங்கயா கேளுங்க. நல்லா கேளுங்க.